Just In
- 48 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சூப்பர் கார்களை வரிசையாக நிற்க வைத்து நொறுக்கிய சம்பவம்! இந்த காரியத்த செஞ்சது யாரு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!
1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 21 சொகுசு கார்களை அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொகுசு கார் பிரியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைக்கக் கூடிய வகையிலான ஓர் சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. ஆமாங்க, 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சூப்பர் கார்கள் கிரேன் வாகனம் கொண்டு அழிக்கப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டிலேயே அரங்கேறியிருக்கின்றது.
இதனை அந்நாட்டு அரசே அழித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அழிக்கப்பட்டிருக்கும் அனைத்து சூப்பர் கார்களும் கள்ளக் கடத்தல் சம்பந்தப்பட்டவை என கூறப்படுகின்றது. இந்த காரணத்தினால்தான் அனைத்து கார்களையும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று ஃபிலிப்பினோ அரசாங்கம் அழித்திருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக 21 லக்சூரி மற்றும் சூப்பர் கார்கள் அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அனைத்து சூப்பர் கார்களும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின்னர், ஒன்றன் பின்னர் ஒன்றாக அனைத்தும் கிரேன் வாகனம் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
மெக்லாரன் 620ஆர், போர்ஷே 911, பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே, லோடஸ் எலைஸ், ஹூண்டாய் ஜெனசிஸ், டொயோட்டா சோலரா மற்றும் 14 மிட்சுபிஷி ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஃபிலிப்பினோ அரசால் தற்போது அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு காரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டவை ஆகும். 2018 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காரணத்திற்காக அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் விதமாக அந்நாட்டு அரசு அனைத்து சொகுசு கார்களையும் கூண்டோடு அழித்திருக்கின்றன. ஃபிலிப்பினோ அரசு இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் காரை அழிப்பது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாகவும் அரசு 17க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்களை கொத்தாக அழித்திருக்கின்றன. அந்த நேரத்தில் பிஎம்டபிள்யூ இசட்1, ஃபெர்ராரி 360 ஸ்பைடர் மற்றும் லம்போர்கினி கல்லர்டோ கார்களை அரசு அழித்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது 2021இல் மீண்டும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட கார்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆகையால், இந்த நிகழ்வு ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கின்றது. ஆனால், நம்மைப் போன்றோருக்கு இந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் சொகுசு மற்றும் சூப்பர் கார் பிரியர்களின் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வளவு விலையுயர்ந்த சூப்பர் கார்களை அழிக்க அவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ என்ற கேள்வியை அவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மேலே கூறியதைப் போல் அவர்களின் கண்களில் இந்த சம்பவம் ரத்த கண்ணீரையே வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?