Just In
- 7 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 40 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 59 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies போடு வெடிய.. ராமராஜனின் சாமானியன் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது அறிவிப்பு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூப்பர் கார்களை வரிசையாக நிற்க வைத்து நொறுக்கிய சம்பவம்! இந்த காரியத்த செஞ்சது யாரு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!
1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 21 சொகுசு கார்களை அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொகுசு கார் பிரியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைக்கக் கூடிய வகையிலான ஓர் சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. ஆமாங்க, 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சூப்பர் கார்கள் கிரேன் வாகனம் கொண்டு அழிக்கப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டிலேயே அரங்கேறியிருக்கின்றது.
இதனை அந்நாட்டு அரசே அழித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அழிக்கப்பட்டிருக்கும் அனைத்து சூப்பர் கார்களும் கள்ளக் கடத்தல் சம்பந்தப்பட்டவை என கூறப்படுகின்றது. இந்த காரணத்தினால்தான் அனைத்து கார்களையும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று ஃபிலிப்பினோ அரசாங்கம் அழித்திருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக 21 லக்சூரி மற்றும் சூப்பர் கார்கள் அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அனைத்து சூப்பர் கார்களும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் பின்னர், ஒன்றன் பின்னர் ஒன்றாக அனைத்தும் கிரேன் வாகனம் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
மெக்லாரன் 620ஆர், போர்ஷே 911, பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே, லோடஸ் எலைஸ், ஹூண்டாய் ஜெனசிஸ், டொயோட்டா சோலரா மற்றும் 14 மிட்சுபிஷி ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஃபிலிப்பினோ அரசால் தற்போது அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு காரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டவை ஆகும். 2018 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட காரணத்திற்காக அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் விதமாக அந்நாட்டு அரசு அனைத்து சொகுசு கார்களையும் கூண்டோடு அழித்திருக்கின்றன. ஃபிலிப்பினோ அரசு இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் காரை அழிப்பது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாகவும் அரசு 17க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்களை கொத்தாக அழித்திருக்கின்றன. அந்த நேரத்தில் பிஎம்டபிள்யூ இசட்1, ஃபெர்ராரி 360 ஸ்பைடர் மற்றும் லம்போர்கினி கல்லர்டோ கார்களை அரசு அழித்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது 2021இல் மீண்டும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட கார்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆகையால், இந்த நிகழ்வு ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கின்றது. ஆனால், நம்மைப் போன்றோருக்கு இந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் சொகுசு மற்றும் சூப்பர் கார் பிரியர்களின் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வளவு விலையுயர்ந்த சூப்பர் கார்களை அழிக்க அவர்களுக்கு எப்படி மனம் வந்ததோ என்ற கேள்வியை அவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மேலே கூறியதைப் போல் அவர்களின் கண்களில் இந்த சம்பவம் ரத்த கண்ணீரையே வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.