Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டாடாவிலிருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா டிசைன் பிரிவு தலைவரானார்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து விலகிய பிரதாப் போஸ் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவர் மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
டாடா கார்கள் என்றாலே வாடிக்கையாளர்கள் காத தூரம் ஓடிய நிலையில், அந்நிறுவனத்தின் பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரத் துவங்கியது. கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், புதிய டாடா கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதற்கு, டிசைன் சிறப்பாக அமைந்து வருவதும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
புதிய டாடா கார்களின் வடிவமைப்புக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளதற்கு காரணியாக, அந்நிறுவனத்தின் டிசைன்ப பிரிவு தலைவராக இருந்த பிரதாப் போஸ் மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.
இந்த நிலையில், அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகினார். இது இந்திய ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எங்கு பணியில் சேரப் போகிறார் என்பதும் புதிராக இருந்தது.
இந்த நிலையில், எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில், நாட்டின் மற்றொரு மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவில் இணைந்துள்ளார். அதாவது, மஹிந்திரா நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வடிவமைப்பு மையங்கள் இனி இவரது கட்டுப்பாட்டில் செயல்படும். மேலும், இங்கிலாந்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய டிசைன் மையமும் இவரது கட்டுப்பாட்டில்தான் செயல்பட உள்ளது.
வரும் ஜூன் 24ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வடிவமைப்புப் பிரிவின் தலைவராக பிரதாப் போஸ் பதவி ஏற்க உள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் வாகன மற்றும் விவசாய வாகன பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிகருக்கு கீழ் பிரதாப் போஸ் பணியாற்ற உள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக வாகன வடிவமைப்புத் துறையில் பாண்டித்தியம் பெற்றவர் பிரதாப் போஸ். இதில், 14 ஆண்டுகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பியாஜியோ மற்றும் டெய்ம்லர் க்றைஸ்ல் நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!