Just In
- 15 min ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 2 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 7 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 7 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!
கட்டிட கலைஞர் ஒருவர் ரஃபேல் போர் விமானத்தின் உருவத்திலான வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார். இந்த வாகனம் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் கட்டிடக் கலைஞர் அதிநவீன போர் விமானமான ரஃபேர் ஏர்கிராஃப்டை தழுவி ஓர் வாகனத்தை வடிவமைத்திருக்கின்றார். இந்த வாகனத்திற்கு 'ராம் பால் ஏர்லைன்ஸ்' எனும் பெயரை அவர் வைத்திருக்கின்றார். ஆனால், நெட்டிசன்கள் சிலரோ, ரஃபேல் போர் விமானத்தை தழுவி இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் 'பஞ்சாப் ரஃபேல்' என்ற பெயரை வைத்திருக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராம்பால் பெஹ்னிவல். இவரே விமானம் அடிப்படையிலான சாலையில் செல்ல கூடிய வாகனத்தை உருவாக்கிய கட்டிடக் கலைஞர் ஆவார். இவர் உருவாக்கியிரு்கும் இந்த வாகனம் மணிக்கு 15 கிமீ முதல் 20 கிமீ வரையிலான வேகத்தில் பயணிக்கக் கூடியது.
இதற்காக எந்த வாகனத்தின் எஞ்ஜினை அவர் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது பற்றிய தகவல் வெளி வரவில்லை. இந்த வாகனத்தை உருவாக்குவதற்காக அவர் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அண்மையில், ஏஎன்ஐ செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இத்தகவலை அவரே தெரிவித்தார்.
ஸ்டியரிங் வீல், முன் பக்க கண்ணாடி மற்றும் சைடு மிர்ரர் என அனைத்து பாகங்களையுமே கஸ்டமைசேஷன் வாயிலாக பெற்றே ராம்பால் பயன்படுத்தியிருக்கின்றார். எனவேதான் இத்தகைய அதிகபட்ச செலவு இந்த வாகனத்தை கட்டமைக்க அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இந்த வாகனத்திற்கு அவர் மேற்கூரையை வழங்கவில்லை. விமானத்தின் தோற்றத்தை சீர்குலைத்துவிடும் என்ற நோக்கத்திற்காக இதனை அவர் நிறுவவில்லை என கூறப்படுகின்றது. தற்போது இவ்வாகனத்தைக் கொண்டு உள்ளூர் சிறுவர்கள் மற்றும் வாகன ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில் ஜாலி ரைடு செய்து வருகின்றார் ராம்பால்.
விரைவில், வாகனத்தைக் காட்சிப் பொருளாக மாற்றவும் அவர் திட்டமிட்டிருக்கின்றார். அண்டை மற்றும் எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்த வேலையில் டஸால்ட் நிறுவனத்தன் அதி-திறன் வாய்ந்த ரஃபேல் போர் விமானங்களை இந்திய அரசு தனது படையில் சேர்த்தது.
2020 வருடத்தின் செப்டம்பர் மாதத்திலேயே இவ்வாகனங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இவ்விமானத்தின் அடிப்படை உருவத்திலேயே சாலையில் செல்லக் கூடிய வாகனத்தை ராம்பால் கட்டமைத்திருக்கின்றார்.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே