Just In
- 18 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஃபேன்ஸி நம்பர் கலாச்சாரம் முடிவிற்கு வருகிறதா? முனைப்பில் பஞ்சாப் அரசு... விழுந்தது புதிய தடை!!
ஆடம்பர எண் (ஃபேன்ஸி நம்பர்) கலாச்சாரத்தை நிறுத்தி கொள்ளும் பஞ்சாப் அரசாங்கத்தின் முயற்சிக்கு தடைக்கு உருவாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
விண்டேஜ் எண்கள் என்றும் அழைக்கப்படும் பழைய ஆடம்பர பதிவு எண்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 100 உரிமையாளர்கள் புதிய எண்களுக்காக மாநில போக்குவரத்து துறையை அணுகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆடம்பரமான எண்களை கொண்ட வாகனங்கள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளதாக பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களிடம் தான் உள்ளது.
விண்டேஜ் எண்களின் விற்பனையின் போதும், அவை புதுப்பித்தலின் போதும் பெரிய அளவில் பணம் கை மாறுதல் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த டிசம்பரில் பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் பழமையான வாகன எண்களை மீண்டும் பதிவு செய்வதை நிறுத்திகொள்ளும் ஆணையை வெளியிட்டார். மோட்டார் வாகன சட்டம் இயற்றப்பட்ட 1988ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வாகன எண்களும் அடங்குகின்றன.
விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையிலும்ம், சட்டத்திற்கு புறமான செயல்களை தவிர்க்கும் நோக்கிலும் பஞ்சாப் முதல்வர் இந்த சட்டத்தை கொண்டுவந்தார். பஞ்சாப் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஹரியானா & ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 217-இன் படி இவ்வாறான உத்தரவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் விண்டேஜ் வாகன பதிவு எண்களை கொண்டிருப்பவர்கள், அதனை தொடரவே விரும்புகின்றனர்.
விண்டேஜ் வாகன எண்கள் சிலரது அடையாளங்களாகவும் விளங்குகின்றன. விஜபிகள் சாலைகளில் அவர்களது வாகன எண்ணை வைத்து அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்களினால் அவர்களது வாகனங்களும் சாலையில் தனியாக தெரிகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல், தொடர விரும்புபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதியானவர்கள் என்பதால் உத்தரவுகளை தொடர்வதில் அரசாங்கங்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றன.
இருப்பினும் ஃபேன்ஸி நம்பர் பயன்பாட்டை தவிர்க்க பஞ்சாப் அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இது பஞ்சாப் போன்ற நாட்டு எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு சிக்கல்களை உருவாக்கக்கூடியது.
சமூக விரோதிகள், விஜபிகளின் வாகன எண்ணில் வாகனங்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது பஞ்சாப்பில் செய்திகள் வெளிவருகின்றன. ஃபேன்ஸி நம்பரை கொண்ட கார்கள் போலீஸார் அழைப்பிற்கு நிற்பதில்லை எனவும் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!