Just In
- 6 min ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 2 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 4 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபேன்ஸி நம்பர் கலாச்சாரம் முடிவிற்கு வருகிறதா? முனைப்பில் பஞ்சாப் அரசு... விழுந்தது புதிய தடை!!
ஆடம்பர எண் (ஃபேன்ஸி நம்பர்) கலாச்சாரத்தை நிறுத்தி கொள்ளும் பஞ்சாப் அரசாங்கத்தின் முயற்சிக்கு தடைக்கு உருவாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
விண்டேஜ் எண்கள் என்றும் அழைக்கப்படும் பழைய ஆடம்பர பதிவு எண்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 100 உரிமையாளர்கள் புதிய எண்களுக்காக மாநில போக்குவரத்து துறையை அணுகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஆடம்பரமான எண்களை கொண்ட வாகனங்கள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளதாக பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களிடம் தான் உள்ளது.
விண்டேஜ் எண்களின் விற்பனையின் போதும், அவை புதுப்பித்தலின் போதும் பெரிய அளவில் பணம் கை மாறுதல் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த டிசம்பரில் பஞ்சாப் மாநில முதல் அமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் பழமையான வாகன எண்களை மீண்டும் பதிவு செய்வதை நிறுத்திகொள்ளும் ஆணையை வெளியிட்டார். மோட்டார் வாகன சட்டம் இயற்றப்பட்ட 1988ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வாகன எண்களும் அடங்குகின்றன.
விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையிலும்ம், சட்டத்திற்கு புறமான செயல்களை தவிர்க்கும் நோக்கிலும் பஞ்சாப் முதல்வர் இந்த சட்டத்தை கொண்டுவந்தார். பஞ்சாப் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஹரியானா & ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 217-இன் படி இவ்வாறான உத்தரவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் விண்டேஜ் வாகன பதிவு எண்களை கொண்டிருப்பவர்கள், அதனை தொடரவே விரும்புகின்றனர்.
விண்டேஜ் வாகன எண்கள் சிலரது அடையாளங்களாகவும் விளங்குகின்றன. விஜபிகள் சாலைகளில் அவர்களது வாகன எண்ணை வைத்து அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்களினால் அவர்களது வாகனங்களும் சாலையில் தனியாக தெரிகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல், தொடர விரும்புபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதியானவர்கள் என்பதால் உத்தரவுகளை தொடர்வதில் அரசாங்கங்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றன.
இருப்பினும் ஃபேன்ஸி நம்பர் பயன்பாட்டை தவிர்க்க பஞ்சாப் அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இது பஞ்சாப் போன்ற நாட்டு எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களுக்கு சிக்கல்களை உருவாக்கக்கூடியது.
சமூக விரோதிகள், விஜபிகளின் வாகன எண்ணில் வாகனங்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது பஞ்சாப்பில் செய்திகள் வெளிவருகின்றன. ஃபேன்ஸி நம்பரை கொண்ட கார்கள் போலீஸார் அழைப்பிற்கு நிற்பதில்லை எனவும் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?