Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்! இப்பவே எதிர்பார்ப்பு எகிறுதே!
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அதன் முதல் மின்சார தயாரிப்பை நாளை உலகளவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நிறுவனம் ஒரு வழியாக நாளை தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.
பிரபல முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று நாளை தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக எலெக்ட்ரிக் காரை கான்செப்ட் (மாதிரி) மாடலாக மட்டுமே காட்சிப்படுத்தி அதன் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்த நிலையில் ஒரு வழியாக நாளை அக்காரை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனமே அதன் முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்ய இருக்கும் நிறுவனம் ஆகும். நாளை (புதன்கிழமை) அன்று பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் விஷன் நெக்ஸ்ட் 100 (Vision Next 100) அறிமுகமாக இருக்கின்றது. இது, சைலன்ட் ஷேடோ (Silent Shadow) எனும் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த அதிக சொகுசு வாகனமாக மட்டுமின்றி ஒற்றை முழுமையான சார்ஜில் மிக அதிக ரேஞ்ஜ் (பயண தூரத்தை) வழங்கும் வாகனமாகவும் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரின் அறிமுகத்தை நிறுவனத்தின் சிஇஓ டார்ஸ்டென் முல்லர்-ஓட்வோஸ் (Torsten Muller-Otvos) அவரது லிங்க்ட் இன் கணக்கு வாயிலாக அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "இந்த தசாப்தத்திற்குள் மின்சாரத்தால் மட்டும் இயங்கும் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரை கொண்டு வருவோம் நான் ஓர் பொது வாக்குறுதி அளித்திருந்தேன். இப்போது, எங்கள் நிறுவனம் இந்த வரலாற்று நிகழ்வை நிறைவேற்ற இருக்கின்றது" என்றார். இவ்வாறு கூறி நிறுவனத்தின் முதல் அதி சொகுசு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரின் வருகையை அவர் உறுதிப்படுத்தினார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிக விரைவில் எரிபொருளால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட கார்களின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் கார்களை மட்டுமே உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையில் 20 ஆண்டிற்குள் களமிறங்க இருப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
2011ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன் பேந்தம் (Phantom) கார் மாடல் அடிப்படையிலான ஓர் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை காட்சியப்படுத்தியது. தொடர்ந்து, 2016ம் ஆண்டில் விஷன் நெக்ஸ்ட் 100 எனும் பெயரில் ஓர் புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தியது. இது முழுமையான தன்னாட்சி அம்சங்கள் கொண்ட மின்சார காராகும்.
இந்த காரையே நாளை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உலகளவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில், புதிய சொகுசு மின்சார கார்குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆகையால், நாளை பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல ஆண்டுகளாக கான்செப்ட் மாடலாக மட்டுமே காட்சியளித்து வந்த ரோல்ஸ் ராய்ஸ்-இன் இந்த கான்செப்ட் கார் நாளை தயாரிப்பு மாடலாகவும் காட்சியளிக்க இருக்கின்றது. ஏற்கனவே இந்த சொகுசு காருக்கான வர்த்தக பதிவை நிறுவனம் செய்துவிட்டது. 'ஷேடோ' (Shadow) எனும் வர்த்தகத்திற்கான பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே புதிய எலெக்ட்ரிக் கார் இந்த பெயரிலேயே விற்பனைக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ரோல்ஸ் ராய்ஸ்-இன் புதிய எலெக்ட்ரிக் காரில் 100 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓர் முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த காரின் அறிமுகத்தை நோக்கி சொகுசு கார் பிரியர்கள் காத்துக் கொண்டிருக்க தொடங்கியிருக்கின்றனர்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த சொகுசு காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. போட் டெயில் எனப்படும் 19 அடி நீளம் கொண்ட காரை அது அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 202.8 கோடி ஆகும்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!