Just In
- 34 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
புதுச்சேரியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறப்பு!
புதுச்சேரியில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பெறுவதற்காக வரிந்து கட்டி களமிறங்கி உள்ளது. புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்களை களமிறக்கவும், வர்த்தக விரிவாக்கப் பணிகளை சிறப்பாக செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.
புதிய கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வரும் அதேநேரத்தில், டீலர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
கார் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்கும் வகையில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. கேயூஎன் மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த புதிய ஷோரூமை அமைத்துள்ளது.
புதுச்சேரி - கடலூர் இடையிலான இசிஆர் சாலையில் மணவெளி ரோடு, அரியாங்குப்பம் என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. இந்த புதிய கார் ஷோரூம் 3,000 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கிறது. 4 கார்களை பார்வைக்கு நிறுத்துவதற்கான வசதியை பெற்றுள்ளது.
மேலும், ஸ்கோடா நிறுவனத்தின் கார் சர்வீஸ் மையம் இசிஆர் சாலையில் கோட்டுப்பாளையத்தில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த கார் சர்வீஸ் மையம் 11,000 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கிறது. 6 கார்களை சர்வீஸ் செய்வதற்கான சர்வீஸ் பே வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 800 கார்கள் வரை சர்வீஸ் செய்ய முடியும்.
இந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் கூறுகையில்,"புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் வரும் புதிய கார்களுக்காக எங்களது டீலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான, சிறந்த சேவையை வழங்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.
எங்களது வர்த்தகத்தில் தென் இந்தியா மிக முக்கியமான சந்தையாக உள்ளதால், அதிக முக்கியத்துவம் கெடுத்து வருகிறோம். புதுச்சேரியில் முதல் டீலர்ஷிப்பை திறந்துள்ளது மகிழ்ச்சி தருவதுடன், எங்களது வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மிக விரைவில் குஷாக் என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். அத்துடன், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் ரேபிட் செடான் காருக்கு மாற்றாக புதிய செடான் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!