Just In
- 56 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதுச்சேரியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறப்பு!
புதுச்சேரியில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பெறுவதற்காக வரிந்து கட்டி களமிறங்கி உள்ளது. புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்களை களமிறக்கவும், வர்த்தக விரிவாக்கப் பணிகளை சிறப்பாக செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.
புதிய கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வரும் அதேநேரத்தில், டீலர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
கார் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்கும் வகையில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. கேயூஎன் மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த புதிய ஷோரூமை அமைத்துள்ளது.
புதுச்சேரி - கடலூர் இடையிலான இசிஆர் சாலையில் மணவெளி ரோடு, அரியாங்குப்பம் என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. இந்த புதிய கார் ஷோரூம் 3,000 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கிறது. 4 கார்களை பார்வைக்கு நிறுத்துவதற்கான வசதியை பெற்றுள்ளது.
மேலும், ஸ்கோடா நிறுவனத்தின் கார் சர்வீஸ் மையம் இசிஆர் சாலையில் கோட்டுப்பாளையத்தில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த கார் சர்வீஸ் மையம் 11,000 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கிறது. 6 கார்களை சர்வீஸ் செய்வதற்கான சர்வீஸ் பே வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 800 கார்கள் வரை சர்வீஸ் செய்ய முடியும்.
இந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் கூறுகையில்,"புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் வரும் புதிய கார்களுக்காக எங்களது டீலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான, சிறந்த சேவையை வழங்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.
எங்களது வர்த்தகத்தில் தென் இந்தியா மிக முக்கியமான சந்தையாக உள்ளதால், அதிக முக்கியத்துவம் கெடுத்து வருகிறோம். புதுச்சேரியில் முதல் டீலர்ஷிப்பை திறந்துள்ளது மகிழ்ச்சி தருவதுடன், எங்களது வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மிக விரைவில் குஷாக் என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். அத்துடன், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் ரேபிட் செடான் காருக்கு மாற்றாக புதிய செடான் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?