Just In
- 56 min ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 1 hr ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 3 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 8 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- Movies தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்!
ஸ்கோடா கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த எஸ்யூவி மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
புதிய எஸ்யூவி கார்களுடன் இந்திய சந்தையை ஒரு கை பார்க்கும் முனைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கடந்த ஆண்டு ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய கரோக் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 1,000 கார்களும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்த நிலையில், கரோக் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் ஆவணத்தில், மிக விரைவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி ஸ்கோடா பிரியர்களுக்கு பெரிய அளவிலான சந்தோஷத்தையும், ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியை எதிர்பார்ப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் செய்தியும் வெளியாகி இருக்கிறது.
அதாவது, கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முதல் லாட் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த எஸ்யூவி விற்பனைக்கு வந்தது.
மேலும், ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது மிகவும் கணிசமான விலையில் வந்ததது. மேலும், இதே கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு ரூ.19.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், இது விலை அதிகம் என்ற கருத்து எழுந்தது.
இருப்பினும், வெறும் 5 மாதங்களில் ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் அனைத்து யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்தது. இந்த விஷயம், ஸ்கோடா நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.
இருப்பினும், கரோக் எஸ்யூவியின் விலை அதிகம் என்ற பிம்பம் இருந்தது. இது கரோக் எஸ்யூவியின் விற்பனையில் சிறிய தடைக்கல்லாக கருதப்பட்டது. விலை அதிகம் என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் ஸ்கோடா இறங்கி இருக்கிறது. அதன்படி, முக்கிய உதிரிபாகங்களாக தருவித்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வது குறித்து ஸ்கோடா ஆட்டோ பரிசீலித்து வருகிறது.
இதன்மூலமாக, ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் விலை மிக கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்போது, விலை சில லட்சங்கள் குறையும் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆவலையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக மாற்றி இருக்கிறது.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதி, நேவிகேஷன், மெமரி வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை இடம்பெற்றன. ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் அசத்தியது.
ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புற சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த கார் மணிக்கு 202 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.
Via- Zigwheels
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?