Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்!
ஸ்கோடா கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த எஸ்யூவி மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
புதிய எஸ்யூவி கார்களுடன் இந்திய சந்தையை ஒரு கை பார்க்கும் முனைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கடந்த ஆண்டு ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய கரோக் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 1,000 கார்களும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்த நிலையில், கரோக் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் ஆவணத்தில், மிக விரைவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி ஸ்கோடா பிரியர்களுக்கு பெரிய அளவிலான சந்தோஷத்தையும், ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியை எதிர்பார்ப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் செய்தியும் வெளியாகி இருக்கிறது.
அதாவது, கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முதல் லாட் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த எஸ்யூவி விற்பனைக்கு வந்தது.
மேலும், ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது மிகவும் கணிசமான விலையில் வந்ததது. மேலும், இதே கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு ரூ.19.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், இது விலை அதிகம் என்ற கருத்து எழுந்தது.
இருப்பினும், வெறும் 5 மாதங்களில் ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் அனைத்து யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்தது. இந்த விஷயம், ஸ்கோடா நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.
இருப்பினும், கரோக் எஸ்யூவியின் விலை அதிகம் என்ற பிம்பம் இருந்தது. இது கரோக் எஸ்யூவியின் விற்பனையில் சிறிய தடைக்கல்லாக கருதப்பட்டது. விலை அதிகம் என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் ஸ்கோடா இறங்கி இருக்கிறது. அதன்படி, முக்கிய உதிரிபாகங்களாக தருவித்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வது குறித்து ஸ்கோடா ஆட்டோ பரிசீலித்து வருகிறது.
இதன்மூலமாக, ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் விலை மிக கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்போது, விலை சில லட்சங்கள் குறையும் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆவலையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக மாற்றி இருக்கிறது.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதி, நேவிகேஷன், மெமரி வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை இடம்பெற்றன. ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் அசத்தியது.
ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புற சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த கார் மணிக்கு 202 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.
Via- Zigwheels
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!