Just In
- 1 hr ago இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
- 2 hrs ago அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!
- 2 hrs ago குடும்பத்தோட ஜாலியா டூர் போகலாம்! கம்மி ரேட்ல விற்பனைக்கு வரப்போகும் மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்!
- 3 hrs ago இப்படி ஒரு அப்பா கிடைப்பது வரம்! மகன் ஆசையை நிறைவேற்ற ரூ92 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த தந்தை
Don't Miss!
- News ஆஹா.. ஸ்டாலினை பார்த்ததுமே கதறிய பெண்.. கட்டியணைத்த கனிமொழி.. காய்கறி வாங்க வந்த இடத்துல என்னதிது?
- Movies Baakiyalakshmi: வீட்டிற்கு தெரியாமல் செழியன் -ஜெனி மீட்டிங்.. அட செழியனுக்குகூடவா சொல்ல மாட்டீங்க!
- Finance டாடா சாயம் வெளுக்க போகுதா..? மாருதி அதிரடி அறிவிப்பு..!!
- Technology தூக்கி பாக்கெட்ல போடலாம்.. ரூ.16,000 போதும்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஏப்ரல் 1 வருது!
- Sports இரண்டாக உடைந்த மும்பை இந்தியன்ஸ்? ரோஹித் பக்கம் சேர்ந்த வீரர்கள்.. பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?
- Lifestyle மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
செம்மையான டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணி தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சாச்சு!
இந்தியாவில் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
ஸ்கோடா நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தைத் தொடர்ந்து டீலர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில், ஸ்கோடா குஷாக் கார்கள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுப்பதற்காக டீலர்களின் ஷோரூம்களுக்கு வர தொடங்கியதாக அண்மையில் வீடியோ மற்றும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, தற்போது டெலிவரி பணிகளும் தொடங்கியிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஸ்கோடா குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால், இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் கொண்ட குஷாக் காரின் டெலிவரி பணிகள் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
1.5 லிட்டர் டிஎஸ்ஐ குஷாக் கார்களின் டெலிவரி பணிகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்தே தொடங்க இருக்கின்றது. ரூ. 25 ஆயிரம் என்ற முன்தொகையில் ஸ்கோடா குஷாக்கிற்கான டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கியது. இந்த பணி தொடங்கப்பட்ட வெறும் பத்தே நாட்களில் 2,500க்கும் மேற்பட்டோர் குஷாக் காருக்கான முன் பதிவை செய்தனர்.
இதனை நல்ல ஆரம்பமாக எடுத்துக் கொண்ட ஸ்கோடா, தற்போது காரை டெலிவரி கொடுக்கும் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 2.0 திட்டத்தின்கீழ் இயங்க தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் தயாரிப்பாக குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது.
எம்க்யூபி ஏ0 இன் எனும் புதிய பிளாட்பாரத்தின் வாயிலாகவே புதிய ஸ்கோடா குஷாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பாரத்தில் வைத்தே தனது மற்றுமொரு புதுமுக காரான டைகுன் காரை ஸ்கோடா கட்டமைத்து வருகின்றது. இது செடான் ரக காராகும். ரேபிட் மாடலுக்கு மேல் இடத்தில் இந்த கார் அமர இருக்கின்றது.
ஸ்கோடா குஷாக் காம்பேக்ட் எஸ்யூவியின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 10.50 லட்சம் ஆகும். மேலும், இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 17.60 லட்சமாக இருக்கின்றது. இவை பான் இந்தியா எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்தியாவில் இந்த காரை மூன்று விதமான வேரியண்டுகளில் ஸ்கோடா வழங்கி வருகின்றது.
ஆக்டிவ், ஆம்பிசன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் ஸ்கோடா குஷாக் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், ஆக்டிவே ஆரம்ப நிலை வேரியண்டாகும். ஸ்டைல் உச்ச நிலை வேரியண்ட். இவையிரண்டிற்கும் மத்தியிலேயே ஆம்பிசன் வேரியண்ட் அமர்ந்திருக்கின்றது. இவையனைத்திற்கும் மேலே, புதிய அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மோன்டே கர்லோ தேர்வை எதிர்காலத்தில் விற்பனைக்குக் களமிறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.
-
இப்படியொரு பிள்ளையை பெத்ததுக்காக ரொம்ப பெருமைப்பட்டு இருப்பாரு!! பரிசாக இவ்வளவு பெரிய வாகனம் கிடைத்தால்...!
-
100 கி.மீ மைலேஜ் தரும் பைக், சென்னை டூ பெங்களூரு விரைவு வந்தே பாரத் என இந்த வாரத்தின் டாப் 10 செய்திகள்!
-
டெக்னாலஜியில் வளர்ந்துவரும் நம் பாரத நாட்டில் இப்படியொரு நிலைமையா!! பெரிய இரயில் விபத்து தடுக்கப்பட்டு இருக்கு