Just In
- 2 hrs ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 2 hrs ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 3 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 7 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் குஷாக்... விரைவில் வருகிறது ஸ்லாவியா... இனி ரேபிட் அவ்ளோதான்!
ஸ்கோடா நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி ஸ்கோடா இந்தியா நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 2,196 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,056 ஆக மட்டுமே இருந்தது.
இதன் மூலம் ஸ்கோடா இந்தியா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் விற்பனையில் 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மிக சிறப்பான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இதற்கு ஸ்கோடா குஷாக்தான் மிக முக்கியமான காரணம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
நடப்பாண்டு நவம்பர் மாதம் ஸ்கோடா நிறுவனம் அதிகம் விற்பனை செய்த கார் என்ற பெருமையை குஷாக் பெற்றுள்ளது. ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 1,876 குஷாக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஸ்கோடா குஷாக் நடப்பாண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கடந்தாண்டு நவம்பர் உடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.
இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளிட்ட கார்களுடன் ஸ்கோடா குஷாக் போட்டியிட்டு வருகிறது. மிகவும் சவால் நிறைந்த ஒரு செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்தாலும், குஷாக் ஈட்டி தரும் விற்பனை எண்ணிக்கை ஸ்கோடா நிறுவனத்திற்கு புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார்களின் பட்டியலில் ஆக்டோவியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் ஸ்கோடா நிறுவனம் 20 ஆக்டேவியா கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. இது 870 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஸ்கோடா சூப்பர்ப் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 218 ஆக இருந்த ஸ்கோடா சூப்பர்ப் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் வெறும் 104 ஆக குறைந்துள்ளது. இது 52 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் நான்காவது மற்றும் கடைசி இடத்தை ஸ்கோடா ரேபிட் பிடித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்கோடா நிறுவனம் 813 ரேபிட் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 22 ஆக சரிந்துள்ளது. இது 97 சதவீத வீழ்ச்சியாகும். ஸ்கோடா ரேபிட் காரின் விற்பனை இந்த அளவிற்கு மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருப்பதற்கு காரணம் உள்ளது.
ஸ்கோடா ரேபிட் கார் விற்பனையில் இருந்து விலக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா என்ற புத்தம் புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் காரணமாகவே ஸ்கோடா ரேபிட் காரின் விற்பனை எண்ணிக்கை மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஸ்கோடா ஸ்லாவியா கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார், குஷாக்கை போலவே, ஸ்கோடா நிறுவனத்திற்கு நல்ல விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஸ்கோடா கார்களின் விலை வெகு விரைவில் உயரவுள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஸ்கோடா இந்தியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கு மூலப்பொருட்களின் விலை உயர்வுதான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஸ்கோடா தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளன.
இதில், மாருதி சுஸுகி, டாடா, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை. ஏற்கனவே செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு காத்திருப்பு காலம் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் விரைவில் கார்களின் விலை உயரவுள்ளது.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!