Just In
- 44 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாஸ்க் அணியாமல் கூலாக வந்த மத போதகர்... அவர் சொன்ன காரணம் இருக்கே! தயவுசெஞ்சு அது என்னனு மட்டும் கேட்காதீங்க!
மாஸ்க் அணியாமல் வந்ததற்கு பலே காரணத்தைக் கூறிய மத போதகரால் அதிகாரிகள் ஷாக்காகியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆகையால், வீட்டை வெளியே வரும் மக்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வெளியே வரும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வாகனங்களில் தனியாக வந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனைப் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் வைரஸ் தொற்று பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மிக மோசமானதாகிவிடம் என உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. ஆகையால், அனைத்து மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளைத் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, வெளியில் வரும் மக்கள் உரிய காரணத்திற்காகவும், உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றனரா என தீவிர கண்கானிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் அரசு முக்கிய அதிகாரிகள் தொடங்கி அடிமட்ட பணியாளர்கள் வரை ஒரு சிலர் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை மீறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அவர்கள் பொது சேவையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிந்தும் சுகாதாரப் பாணியாளர்கள் அவர்களுக்கு கடுமையான அபராதங்களை வழங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் வந்த ஓர் மத போதகர் பாதுகாப்பு அதிகாரியிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மத போதகரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தாமோவைச் சேர்ந்த அவர், அயோத்தி ராம் ஜென்பூமி நிர்மன் அறக்கட்டளையின் தேசிய துணைத்த தலைவர் சுவாமி ஆத்மானந்த் சரஸ்வதி ஆவார்.
இவரே பொது சாலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் முகக் கவசம் அணியாமல் வந்தவர். இவரையே மாஸ்க் அணியும்படி காவலர்கள் சிலர் வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் மிக விநோதமான மற்றும் ஷாக்களிக்கக் கூடிய பதில்களை அவர் கூறியிருக்கின்றார்.
"பிரதமர் மோடி எங்களுடைய நலனை பாதுகாத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதைதான் நான் கடைபிடிக்கின்றேன். மாஸ்க் அணிந்தால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. இதனால் விபரீதம் ஏதும் ஏற்பட்டால் யார் பொறுப்பு. எனவேதான் நான் மாஸ்க் அணியவில்லை" என்று அவர் கூறியிருக்கின்றார்.
இருப்பினும், விதிமுறைகளை எடுத்துக் கூறிய காவல்துறையினர் அவரை மாஸ்க் அணியும்படி பல முறை கூறியிருக்கின்றனர். இருப்பினும், தன்னுடைய எண்ணத்தில் அவர் விடாப்பிடியாக இருந்திருக்கின்றார். இதனையடுத்து, காரை ஓரம்கட்ட சொன்ன அதிகாரிகள் அந்த மத போதகருக்கு அபராத செல்லாணை வழங்கி வழி அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம், மூன்று லட்சம் என எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதேபோன்று வைரஸ் பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
Image Courtesy: Cobrapost
இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாப்பானது அவசியமானதாக அமைந்துள்ளது. மாஸ்க் அணிவதை, சிலர் இடையூறாக எண்ணுகின்றனர். ஆனால், தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. ஆகையால், வாகனத்தில் தனித்து சென்றாலும் மாஸ்க் அணிந்து பயணிப்பது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளில் மட்டுமின்றி உயிர் கொல்லி வைரசின் பாதிப்பில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவும்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!