Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எத்தனை சதவீதம் வரை டாடா வாகனங்களின் விலை உயர இருக்கின்றது என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் தயாரிப்புகளின் விலையைக் கணிசமாக உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இருக்கும் விலையில் 1.8 சதவீதம் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்புதிய விலையுயர்வு நாளை முதல் (மே 8) அமலுக்கு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், இன்றைய தினத்திற்குள் புக் செய்பவர்களுக்கு பழைய விலையின் (விலையுயர்வு இல்லாமல்)-படியே புதிய கார்களை டாடா விற்பனைச் செய்ய இருக்கின்றது.
கார் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் சைலேஷ் சந்த்ரா கூறியுள்ளார். தொடர்ந்து, புதிய விலையுயர்வு மே7ம் தேதிக்குள் புக் செய்தவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.
முன்னதாக கடந்த 2021 ஜனவரியில் ரூ. 26 ஆயிரம் வரை விலையுயர்வை செய்திருந்தது டாடா மோட்டார்ஸ். இதற்கு அடுத்தபடியாக தற்போது மீண்டும் தனது வாகனங்களின் விலையை உயர்த்தும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.
டாடாவின் இந்த நடவடிக்கை அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 1.8 சதவீத விலையுயர்வு என்பது மாடல் மற்றும் வேரியண்டைப் பொருத்து ஏற-குறைய அமையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஏப்ரலில் டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை கடுமையாக சரிவைச் சந்தித்தது. 2020 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 41 சதவீதம் வரை நிறுவனத்தின் வாகன விற்பனை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவு கடுமையான சரிவை நிறுவனம் சந்தித்திருக்கின்ற வேலையிலும் விலையுயர்வுகுறித்த தகவலை டாடா வெளியிட்டுள்ளது.
அதேசமயம், டாடா நிறுவனத்தின் புதுமுக வருகையான சஃபாரி எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. கடந்த மாதம் வெளியாகிய தகவலின்படி, இக்காருக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதுதவிர, டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களுக்கும் கணிசமான காத்திருப்பு காலம் நீடித்து வருகின்றது. மாநிலம் மற்றும் நகரங்களைப் பொருத்து காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?