Just In
- 36 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... தரமான சம்பவம்!!
டாடா நிறுவனம் 25 விங்கர் ஆம்புன்ஸ்களை குஜராத் மாநில அரசிடம் ஒப்படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த வாகனங்களில் விங்கர் மாடலும் ஒன்று. இந்த வாகனத்தையே ஆம்புலன்ஸாக மாற்றி குஜராத் மாநில அரசிடம் டாடா வழங்கியிருக்கின்றது. குஜராத் மாநில அரசின் சுகாதாரத்துறையிடம் அந்த வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
அண்மையில் மாநில அரசிடம் இருந்து 115 புதிய ஆம்புலன்ஸ்களுக்கான ஆர்டர் டாடாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே முதல் லாட்டாக 25 டாடா விங்கர் ஆம்புலன்ஸ்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு குஜராத்தின் காந்திநகர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசின் முக்கிய அதிகாரிகள் பலர் பங்குக் கொண்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலின் வீரியம் சற்றே குறைய தொடங்கியிருக்கின்றது. இருப்பினும், அதன் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போதும் லட்சத்தைத் தொட்ட வண்ணம் இருக்கின்றது. ஆகையால், ஆம்புலன்ஸ்களின் தேவை இப்போதும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே குஜராத் அரசு அண்மையில் டாடாவிற்கு ஆர்டர் கொடுத்தது.
இதனடிப்படையில் தற்போது ஆம்புலன்ஸ்கள் டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என உயிர்காக்கும் கருவிகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா நிறுவனம் விங்கர் வாகனத்தை மட்டுமின்றி மேஜிக் எக்ஸ்பிரஸ் வாகனத்தையும் ஆம்புலன்ஸாக மாற்றி வழங்கி வருகின்றது. இதேபோன்று எல்பி410 வாகனத்தையும் ஆம்புலன்ஸ் வெர்ஷனில் வழங்கி வருகின்றது. இதில் இரு ஸ்ட்ரெட்சரைக் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நாடு முழுவதும் இப்போதும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையைப் போக்கும் பொருட்டு ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள் போன்ற வாகனங்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு, தற்போதும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில்கூட சமீபத்தில் 200க்கும் மேற்பட்ட கால் டாக்சி வாகனங்கள் தற்காலிக ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின் பேரில் வாகனங்கள் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!