Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மிகமிக மலிவு விலையில் டாடாவின் புதிய வர்த்தக வாகனம்! விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!
டாடா நிறுவனம் மிக மிக குறைந்த விலையில் ஓர் புதிய வர்த்த வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்நத வர்த்தக வாகன மாடல்களில் ஏஸ் கோல்ட்-ம் ஒன்று. வர்த்தக வாகனதுறையில் குட்டியானை என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த வாகன மாடலிலேயே புதிதாக சிஎக்ஸ் எனும் பெட்ரோல் தேர்வை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனத்திற்கு மிகக் குறைந்த விலையாக ரூ. 3.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் வர்த்தக வாகன பிரிவில் எந்தவொரு வாகனமும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், புதிய டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎக்ஸ் இந்தியாவின் மலிவு விலை கமர்சியல் வாகனமாக களமிறங்கியிருக்கின்றது.
டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் இறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபிளாட் பெட் மற்றும் அரை டெக் லோடு பாடி ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஃபிளாட் பெட் உடல்வாகு கொண்ட வாகனத்திற்கே ரூ. 3.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரை டெக் லோடு பாடி தோற்றத்திலான ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎஸ் வாகனத்திற்கு ரூ. 4.10 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. குறைந்த விலையை நிர்ணயித்தது மட்டுமின்றி இந்த வாகனத்திற்கு சுலப மாத தவணையை வழங்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியுடன் இணைந்து 90 சதவீதம் கடன் மற்றும் 7,500 என்ற குறைந்தபட்ச மாத தவணை ஆகிய திட்டங்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இது, குறைந்த விலை வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களை மேலும் கவர்ந்திழுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த சிறப்பு சலுகைகள் கிராமப்புற வாடிக்கையாளர்களை மட்டுமின்றி நகர்புற வாடிக்கையாளர்களையும் அதிகம் கவர்ந்திழுக்கும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் வாகனத்தில் 694சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்ஜின் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும். டெலிவரி சேவை, லாகிஸ்டிக்ஸ், காய்-கறி ஏற்றி செல்வது, விவசாய பொருட்களை ஏற்றிசெல்வது, மருத்துவம், எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றி செல்வது போன்ற பல்வேறு பணிகளுக்கு உதவும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் இந்த புதிய ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎக்ஸ் வாகனத்திற்கு சம்பூர்ணா சேவா 2.0 திட்டத்தின் பல்வேறு சிறப்பு சேவையை வழங்க இருக்கின்றது. சர்வீஸ், வாகன பராமரிப்பு மற்றும் மறு விற்பனை நல்ல பலன் போன்ற கணிசமான சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இத்துடன், கூடுதலாக 24X7 ரோட்-சைடு அசிஸ்டண்ட், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு சேவையையும் வழங்க இருப்பதாக டாடா தெரிவித்துள்ளது. ஆகையால், இந்திய வர்த்தக வாகன துறையில் டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎக்ஸ் வாகனம் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!