Just In
- just now பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா? கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. இத்தனைக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை சரிந்துள்ளது. இருந்தாலும் சரி நிகரான போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி முதலிடத்தில் வீற்றுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா நிறுவனம் 500 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 427 ஆக குறைந்துள்ளது. இது 14.6 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பிடித்துள்ளது.
எம்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 204 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. வரும் மாதங்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் மேம்படுத்தப்பட்ட 2021 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன் டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்கும் பணியிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி நேர் எதிர் போட்டியாளர் கிடையாது. இருந்தாலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி சமீபத்தில் பின்னடைவு ஒன்றை சந்தித்துள்ளது. டெல்லி மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆனால் ரேஞ்ச் தொடர்பாக எழுந்த புகார் காரணமாக, மானியம் பெற தகுதியுடைய வாகனங்களின் பட்டியலில் இருந்து டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை டெல்லி மாநில அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது. ஆனால் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது என புகார்தாரர் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த பிரச்னையை சரி செய்ய டாடா டீலர்ஷிப்பிற்கு பலமுறை சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் இதன் காரணமாக எந்த பலனும் ஏற்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. எனவே டெல்லி அரசுக்கு அவர் புகார் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அளித்த பதிலில், 312 கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பது அராய் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மற்ற வாகனங்களை போலவே, டிரைவிங் ஸ்டைல், சாலைகள், ஏசி பயன்பாடு ஆகிய காரணங்களால் மைலேஜ் பாதிக்கப்படலாம் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியது. ஆனால் இந்த பதிலால் டெல்லி அரசு திருப்தியடையவில்லை. எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான மானியத்தை அதிரடியாக ரத்து செய்து விட்டது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!