Just In
- 55 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
டாடா செய்த தரமான சம்பவம்! ஒரே நாள், ஒரே நகரம் - புதிதாக 8 ஷோரூம்கள் திறப்பு! செம்ம ஸ்பீடில் ஜம்பவான் நிறுவனம்!
டாடா நிறுவனம் ஒரே நாள், ஒரே நகரத்தில் எட்டு புதிய ஷோரூம்களை திறந்து வைத்துள்ளது. எந்த நகரத்தில் இந்த தரமான சம்பவம் நடைபெற்றது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என்றழைக்கப்படும் டாடா மோட்டார்ஸ், புதிதாக 8 ஷோரூம்களை திறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஷோரூம்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே நகரத்தில் திறக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கின்றது.
இந்த செயலினால் டாடா நிறுவனம் ஷோரூம் திறப்பதில் புதிய வரலாற்றை படைத்துள்ளது. அனைத்து புதிய ஷோரூம்களும் குஜராஜ் மாநிலம், அஹமதாபாத் நகரத்திலேயே திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால், அஹமதாபாத் நகரவாசிகளால் எளிதில் டாடா கார்களை வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாநிலத்தில் தனது விற்பனை நெட்வொர்க்கை கூடுதலாக்கும் வகையில் இந்த தரமான சம்பவத்தை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது. குஜராத்தில் சமீப காலமாக டாடாவின் தயாரிப்புகளுக்கு கணிசமாக வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
இதனடிப்படையிலேயே அங்குள்ள மக்களை மேலும் கவரும் வகையில் டாடா தனது விற்பனை நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்திருக்கின்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 95 சதவீதம் விற்பனை வளர்ச்சியை டாடா குஜராத்தில் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, டாடா நிறுவனம் விற்பனை சேவையை ஆன்லைன் வாயிலாகவும் செய்து வருகின்றது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவரும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகின்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஷோரூம்களை திறப்பதன் வாயிலாக மட்டுமின்றி புதிய தயாரிப்புகள் வாயிலாகவும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் விரைவில் புதிதாக எச்பிஎக்ஸ் எனும் மைக்ரோ ரக எஸ்யூவி காரை இந்திய சந்தையில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் காரை கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்திவிட்ட நிலையில் தற்போதே உற்பத்திக்காக அனுப்பி வைத்திருக்கின்றது. அதாவது, டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி ரக காரின் உற்பத்தி பணிகளை தொடங்கியிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் மைக்ரோ எஸ்யூவி ரக கார் சந்தையை எச்பிஎக்ஸ் பதம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டாடா எச்பிஎக்ஸ் விற்பனைக்கு வரும்போது ஹார்ன்பில் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கேயூவி என்எக்ஸ்டி, மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கேஸ்பர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?