Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Movies அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இனி டாடா கார்களை வாங்குவது ரொம்ப சுலபம்! கோடக் மஹிந்திரா உடன் கூட்டுசேர்ந்த டாடா! சூப்பரான பிளான்கள் இருக்கு!
கார்களுக்கு சுலபமாக கடன் வழங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கோடக் மஹிந்திரா பிரைம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் வாகன விற்பனை சரிவைச் சந்தித்தன. அந்தவகையில், நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்சும், கணிசமான விற்பனை இழப்பை கொரோனா இரண்டாம் அலையின்போது சந்தித்தது.
இந்நிலையில் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் பிரபல நிதி நிறுவனமான கோடக் மஹிந்திரா பிரைம் லிமிடெட்டுன் இணைந்திருக்கின்றது. இந்நிறுவனத்துடன் இணைந்து மூன்று விதமான நிதி திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெட் கார்பெட், பிரைம் விஷ்வாஸ் மற்றும் குறைந்த இஎம்ஐ ஆகிய திட்டங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்புறம் என இரு பகுதி மக்கள்களுக்கு பயன்படும் வகையில் இத்திட்டத்தை நிறுவனங்கள் வகுத்துள்ளன. இதன் மூலம் சுய தொழில் செய்வோர், சம்பளம் பெறுவோர் மற்றும் வருமான சான்று இல்லாதவர் என பலராலும் பயன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கார் விற்பனையை சூடிபிடிக்க செய்யவும், வாடிக்கையாளர்களுக்கும் எளிய கடன் திட்டத்தை வழங்கும் நோக்கிலும் டாடா மோட்டார்ஸ் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கின்றது. வருமான சான்று இல்லாதவர்களுக்குகூட கார் கடனில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, நிச்சயம் டாடா கார்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய கடன்குறித்து டாடா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ராஜன் அம்பா கூறியதாவது, "கோடக் மஹிந்திரா பிரைம் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டாடா கார் வாங்குவதை மேலும் சுலபமாக்கும் நோக்கில் இந்த கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொந்தரவு இல்லா அனுபவத்தை வழங்கும்" என்றார்.
மேலும், இரு நிறுவனங்களின் கூட்டணி குறித்து மஹிந்திரா பிரைம் லிமிடெட் நிர்வனத்தின் நிர்வாக இயக்குனர் வயோமேஷ் கபாசி கூறியதாவது, "தொற்றுநோய் அதிகரித்திருப்பதால் மக்கள் அதிகளவில் தனி காரை வாங்க தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எளிமையான மற்றும் கவர்ச்சிகரமான கார் நிதி உதவியை வழங்கும் வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இந்த நிதி திட்டத்தின்கீழ் புதிய கார் வாங்க விரும்புவோர் அருகில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையாளர்களை அணுக நிறுவனம் அறிவுறுத்தியிருக்கின்றது. அங்கு இன்னும் பல்வேறு விரிவான தகவல்கள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மற்றும் கோடக் நிதி நிறுவன கூட்டணி, அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் டாடா கார்களின் விற்பனையை தூக்கி நிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்நிறுவனத்தின் டாடா சஃபாரி காருக்கு ஏற்கனவே இந்தியாவில் நல்ல வரவேற்பு கணிசமாக கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.