Just In
- 19 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 30 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மின்சார வாகனங்களுக்காக 1,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்து டாடா பவர் நிறுவனம் அசத்தல்!
டாடா பவர் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் புதிய மைல்கல்லை கடந்து அசத்தி இருக்கிறது. மேலும், சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
நடப்பு தசாப்தம் மின்சார வாகனங்களுக்கான பொற்காலத்தை நோக்கிய முதல் படியாக மாறி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்களுக்கான முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றபடி, மின்சார வாகனங்களுக்கான வரவேற்பும் கூடி வருகிறது.
இந்த நிலையில், மின்சார வாகனத்தை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதி மிக குறைவாக இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த தயக்கத்தை போக்குவதற்கும், பெட்ரோல் நிலையங்கள் போன்று சார்ஜ் ஏற்றும் நிலையங்களுக்கான தேவை குறித்தும் அறிந்த நிறுவனங்கள் இந்த துறையில் கால் பதித்துள்ளன.
அந்த வகையில், டாடா பவர் நிறுவனம் மின்சார வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் செய்யும் நிலையங்களை நாடுமுழுவதும் அமைத்து வருகிறது. மிகப்பெரிய மின்சார வாகன சார்ஜ் நிலையங்கள் கொண்ட கட்டமைப்பாக உருவாக்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், டாடா பவர் நிறுவனம் 1,000க்கும் மேற்பட்ட சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைத்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இது இந்திய மின்சார வாகனத் துறையில் புதிய மைல்கல்லாக மட்டுமின்றி, முக்கிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
டாடா பவர் நிறுவனத்தின் பதிவு செய்யும் மின்சார வாகன உரிமையாளர்கள் மிக எளிதாக இனி தங்களது வாகனங்களுக்கு டாடா பவர் நிலையங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். பெருந்திட்ட அலுவலக வளாகங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வியாபார மையங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் வாடிக்கையாளர்கள் சேவையை பெறும் விதத்தில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 180 நகரங்களில் 1,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை டாடா பவர் நிறுவனம் அமைத்துள்ளது. பஸ் உள்பட அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சார்ஜ் ஏற்றும் வசதிகளை டாடா பவர் நிறுவனம் வழங்குகிறது.
மேலும், மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் டாடா பவர் நிறுவனம் கைகோர்த்து, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதியை செய்து தருவதற்கும் ஒப்பந்தங்களை செய்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் சார்ஜ் ஏற்றும் கவலையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
எம்ஜி மோட்டார், ஜாகுவார் லேண்ட்ரோவர், டிவிஎஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுடன் டாடா பவர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இந்த நிறுவனங்களின் மின்சார கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் டாடா பவர் நிறுவனத்தின் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை பயன்படுத்த முடியும்.
மேலும், டாடா பவர் நிறுவனத்தின் சார்ஜ் ஏற்றும் நிலையங்களில் எளிதான பணம் செலுத்தும் மற்றும் பதிவு நடைமுறைகளுக்காக Tata Power EZcharge என்ற மொபைல் அப்ளிகேஷனும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக மிக எளிதாக சார்ஜ் செய்வதற்கான வாய்ப்பும், நேர விரயமும் தவிர்க்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அத்துடன், மேலும் பல மின்சார வாகன தயாரிப்பு நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.