Just In
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ குறைவான விலையிலா?
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் Tata Punch மைக்ரோ எஸ்யூவி கார்குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன. என்னென்ன வேரியண்ட் மற்றும் என்னென்ன நிறத் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், இந்தியாவில் மிக விரைவில் பஞ்ச் (Punch) எனும் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 2021 தீபாவளியை முன்னிட்டு இக்கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். ஏற்கனவே விற்பனையாளர்கள் ஷோரூம்களில் இந்த கார் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது. இக்காரை டாடா நிறுவனம் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100என்எக்ஸ்டி ஆகிய மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.
வரும் அக்டோபர் 4ம் தேதி அன்றே இந்த காரை நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்த நாளை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் தற்போது புதிய தகவல்கள் டாடா பஞ்ச் குறித்து வெளியாகி இருக்கின்றன.
ட்ரிம்:
டாடா பஞ்ச் காரின் வேரியண்ட் விபரங்கள் மற்றும் நிறம் பற்றிய முக்கிய தகவல்களே இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கின்றன. டாடா பஞ்ச் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ப்யூர் (Pure), அட்வென்சர் (Adventure), அக்காம்ப்ளிஷ்ட் (Accomplished) மற்றும் கிரியேட்டிவ் (Creative) ஆகிய தேர்வுகளிலேயே டாடா பஞ்ச் விற்பனைக்கு வர இருக்கின்றது.
நிறங்கள்:
இதேபோல் ஆறு விதமான நிற தேர்வுகளில் டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. வெள்ளை (White), கிரே (Grey), ப்ரோன்சே (Bronze), ஆரஞ்சு (Orange), நீலம் (Blue) மற்றும் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) ஆகிய நிற தேர்வுகளிலேயே டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
இதில் உயர்நிலை ட்ரிம்மாக காட்சியளிக்கும் கிரியேட்டிவ்-இல் இரு நிற தேர்வு வழங்கப்பட இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த உறுதியான தகவல்களை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டிருக்கின்றது.
எஞ்ஜின்:
டாடா பஞ்ச் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே திறன் கொண்ட எஞ்ஜினையே டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் பிரீமியம் தர காரில் வழங்கி வருகின்றது.
இத்துடன், 1.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரிலும் பஞ்ச் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் ஏஎம்டி ஆகிய தேர்வுகளிலும் டாடா பஞ்ச் கார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் உயர்நிலை ட்ரிம்களாக விற்பனைக்கு வர இருக்கும் அக்காம்ப்ளிஷ்ட் மற்றும் கிரியேட்டிவ் ட்ரிம்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.
பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 4.99 லட்ச என்ற மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், விலை குறித்த தகவலை டாடா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. மிக விரைவில் இதுபோன்ற முக்கிய தகவல்களை டாடா மோட்டார்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டாடா பஞ்ச் வரும் அக்டோபர் 4ம் தேதி அறிமுகமாக இருப்பதை முன்னிட்டு டாடா டீலர்கள் சிலர் ரூ. 5 ஆயிரம் என்ற மிக மிக குறைவான விலையில் முன் பதிவுகளைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல. அக்டோபர் 4ம் தேதி அன்று முதல் இருந்தே அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா மோட்டார்ஸ் அதன் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) மற்றும் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், டாடா பஞ்ச் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இத்துடன், தொடுதிரை வசதி உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்சிலான டிஎஃப்டி திரை, தானியங்கி ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி ஆகிய வசதிகளும் பஞ்ச் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!