Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!
புனே தொழிற்சாலையில், சஃபாரியின் தயாரிப்பில் வெற்றிக்கரமாக 10,000-ஐ கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில், விற்பனையில் இருக்கும் ஹெரியர் எஸ்யூவி மாடலின் மூன்று-இருக்கை வரிசை வெர்சனாக சஃபாரியை நடப்பு 2021ஆம் வருடத்தின் துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதேபோன்று ஹெக்டரின் 3-இருக்கை வரிசை மாடலாக ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் அந்த சமயத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்பின் ஹூண்டாய் நிறுவனம் அல்கஸாரை அறிமுகப்படுத்த, தற்சமயம் இந்த மூன்று நீளமான எஸ்யூவி வாகனங்களுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸுக்கு புனேவிலும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து 100வது சஃபாரி காரை கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையில் இருந்து வெளியிட்டு இருந்தது.
ஆனால் அதன்பின் மீதி 9,900 சஃபாரி கார்களை வெறும் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. சஃபாரியின் தயாரிப்பில் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வணிக தலைவர் ஷைலேஷ் சந்த்ரா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நான்கு மாதங்களில் புத்தம் புதிய சஃபாரியின் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நம் நாட்டில் நிலவிவரும் தற்போதைய கடினமான சூழலில் இந்த மைல்கல்லை நாங்கள் அடைந்துள்ளோம்.
10000வது யூனிட் வெளிவந்திருப்பது, இந்த புகழ்பெற்ற மாதிரியின் மறுப்பிறப்பிற்கு காரணமான பல்வேறு அணிகள் மேற்கொண்ட கூட்டு கடின உழைப்பை வெளிக்காட்டுகிறது என்றார். புதிய சஃபாரி 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
தற்சமயம் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாக விளங்கும் சஃபாரி, சந்தையில் 25.2 சதவீத பங்கை கொண்டுள்ளது. ஹெரியருடன் சேர்த்து மொத்தம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் 41.2% பங்கை டாடா சஃபாரி கொண்டுள்ளது.
டாடா சஃபாரிக்கு விற்பனையில் முக்கிய போட்டியாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் விளங்குகிறது. டாடா மோட்டார்ஸின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் உருவாக்கப்படும் சஃபாரி, ஒமேகார்க்-இன் திறனை கொண்டுள்ளது.