Just In
- 3 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மழைநீரில் முழ்கிய புத்தம் புதிய டாடா கார்கள்!! எந்த ஊரில் தெரியுமா? வீடியோ!
புதிய டாடா சஃபாரி, அல்ட்ராஸ் கார்கள் கனமழையால் டீலர்ஷிப் வளாகத்திற்குள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.
நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருகி ஓடுவதையும் பார்த்து வருகின்றோம்.
இத்தகைய வெள்ளத்தில் சிக்கும் கார்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறிவிடும். அதிலும் சாலையில் அனாதை போல் நிற்க வைக்கப்படும் கார்கள் நீரில் ஒன்றோடு ஒன்று இடித்து கொண்டு மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிடும்.
இதனால் தான் இத்தகைய சூழலை எல்லாம் கருத்தில் கொண்டு வளாகத்திற்குள் குறிப்பிட்ட இடைவெளியுடன் தான் கார்களை டீலர்கள் நிறுத்தி வைப்பர். இருப்பினும் கனமழையில் வாகனங்கள் மூழ்குவதை தடுப்பது பெரும்பாலான டீலர்களால் முடியாத காரியமாக உள்ளது.
அவ்வாறு ஹரியானாவில் டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா கார்கள் மழைநீரில் பாதியளவிற்கு மூழ்கியுள்ளன. கீழுள்ள இதுகுறித்த வீடியோவில் ஹரியானாவில் பைபாஸ் சாலை ஒன்றிற்கு அருகில் உள்ள இந்த டீலர்ஷிப் வளாகம் முழுவதையும் மழைநீர் ஆக்கிரமித்துள்ளதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவில் டாடா கார்களாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சஃபாரி மற்றும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் ஏகப்பட்டவை உள்ளன. வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இவை அனைத்தும் டெலிவிரிக்காக தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இவற்றில் மழைநீரால் சிறிது அழுக்கு படிந்திருக்க வாய்ப்புள்ளதால் இவை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படாது. வெள்ளை நிற சஃபாரி & அல்ட்ராஸ் கார்களுடன் சிவப்பு நிறத்தில் டியாகோ ஹேட்ச்பேக் காரையும் இந்த வீடியோவில் பார்க்க முடியாது.
இவை எந்த அளவிற்கு கனமழையால் பாதிப்படைந்துள்ளன என்பது குறித்த விபரங்கள் இல்லை. ஏனெனில் இன்னும் இதுகுறித்த சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் மையம் ஆய்வை மேற்கொள்ள துவங்கவில்லை. எப்படியிருந்தாலும் என்ஜின் பெரிய அளவில் பாதிப்படைந்திருக்க வாய்ப்பில்லை.
இருப்பினும் கார்களின் உள்ளே நீர் புகுந்திருக்கலாம் என்பதால் கேபினில் அழுக்கு படிந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, ஹரியானாவின் இந்த குறிப்பிட்ட பகுதிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.