Just In
- 3 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 29 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 51 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எதிர்பார்க்கப்பட்ட காரின் உற்பத்தியை தொடங்கியது டாடா... இனிதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது! நடுக்கத்தில் ஹூண்டாய்!
டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரின் உற்பத்தியை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி ரக காரின் உற்பத்தியை டாடா நிறுவனம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் இந்த கார் ஹார்ன்பில் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நொய்டாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. இந்த வாகன கண்காட்சியில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய மற்றும் எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. அந்தவகையில், டாடா நிறுவனம் எச்பிஎக்ஸ் எனும் பெயரில் சிறிய எஸ்யூவி காரை காட்சிப்படுத்தியது.
அப்போதில் இருந்தே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே ஜாம்பவான் நிறுவனமான டாடா எச்பிஎக்ஸ் காரின் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் டாடா கார்களிலேயே மிகக் குறைந்த விலையில் எச்பிஎக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே இந்தியர்கள் மத்தியில் இக்கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது.
இது மஹிந்திராவின் கேயூவி என்எக்ஸ்டி, மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கேஸ்பர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரை டாடா நிறுவனம் அதன் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிளாட்பாரத்தில் வைத்தே அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் இரண்டாவது மாடலாக எச்பிஎக்ஸ் இருக்கின்றது.
டாடா நிறுவனம் தற்போது தனது தயாரிப்புகளை இம்பேக்ட் 2.0 கொள்கையின் அடிப்படையில் உருவாக்கி வருகின்றது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டதே ஹாரியர் உள்ளிட்ட புகழ்வாய்ந்த மாடல்கள். ஆகையால், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன்), பல்வேறு கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் எச்பிஎக்ஸ் காரில் இடம்பெற இருக்கின்றது.
Source: Team BHP
காரில் சிறந்த எஞ்ஜின் திறனுக்காக 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜின் 5ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்க இருக்கின்றது.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!