Just In
- 9 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 2 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 2 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?
டாடா டியாகோ சிஎன்ஜி காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டியாகோ சிஎன்ஜி காருக்கு, டாடா டீலர்ஷிப்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஜிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா டியாகோ சிஎன்ஜி மாடல் இந்திய சந்தையில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த புதிய மாடலின் டெலிவரி பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவது ஏற்கனவே நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த இரண்டு கார்களும் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றன.
சிஎன்ஜி பம்ப்பில் வரிசையில் காத்திருக்கும்போது கூட ஸ்பை படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. டாடா டியாகோ சிஎன்ஜி கார், அதே 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
ஆனால் சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும்போது பவர் மற்றும் டார்க் அவுட்புட் குறையலாம். அதே நேரத்தில் சிஎன்ஜி வேரியண்ட் மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. XT மற்றும் XZ வேரியண்ட்கள் அடிப்படையில் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இதில் XT வேரியண்ட்டில், வீல் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவுடன் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹார்மன் நிறுவனத்தின் 4 ஸ்பீக்கர், இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் XZ வேரியண்ட்டிலும் ஏராளமான வசதிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். மேலும் கூல்டு க்ளவ் பாக்ஸ், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, பின் பகுதியில் டீஃபாகர் உள்ளிட்ட வசதிகளையும் இந்த வேரியண்ட் பெற்றுள்ளது.
எனினும் வழக்கமான டியாகோ காருடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி வேரியண்ட்டின் டிசைனில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் சிஎன்ஜி பேட்ஜ்கள் இடம்பெறலாம். அதே நேரத்தில் வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 60 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பன்ச் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள டாடா பன்ச் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வரும் காலங்களில் பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது.
டாடா டிகோர் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!