Just In
- 8 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 38 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருவதுடன், லாரி போன்ற வர்த்தக வாகனங்களையும் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது.
ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. வர்த்தக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. வர்த்தக வாகனங்களின் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டு வாகனங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மாருதி சுஸுகி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற முன்னணி நிறுவனங்களின் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், வாகனங்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி கொண்டுள்ளது. அதுவும் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் வாகனங்களின் விலை உயர்வது, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் புதிய சஃபாரி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் புதிய டாடா சஃபாரி கார் விற்பனையில் போட்டியிட்டு கொண்டுள்ளது.
மேலும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் உடனும், புதிய டாடா சஃபாரி விற்பனையில் போட்டியிடவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய டாடா சஃபாரிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சஃபாரி என்ற பெயரும் கூட இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர புதிய 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக உள்ளது. குறைவான விலை மற்றும் நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்பது போன்ற காரணங்களால்தான், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை இந்தியாவில் தூள் கிளப்பி கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின், எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்து கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டிலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.