Just In
- 1 hr ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 2 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 4 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- News Exclusive: நான் சாதி வெறியன் இல்லை.. அது பொய் வீடியோ! கொமதேக நாமக்கல் வேட்பாளர் சூரியமூர்த்தி பேட்டி
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனியின் அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!
யுடியூப்பர் மதன் கௌரியின் வேண்டுக்கோளிற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்திய வருகையில் இருக்கும் தடையை போட்டுடைப்பது போல் பதிலளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
வாகனங்கள் இறக்குமதியில் கணிசமான வரி குறைப்பு கிடைத்தால், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் டெஸ்லா உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்திடம் தங்களது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்படும் வரியில் மிக பெரிய வரி குறைப்பிற்கு டெஸ்லா நிறுவனம் சார்பில் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
விற்பனைக்கு வந்தாலும் டெஸ்லா நிறுவனம் குறைந்த அளவிலான கார்களை தான் இறக்குமதி செய்யும். இருப்பினும் அதற்கும் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அதிகப்படியான இறக்குமதி வரிகள் தடையாக அமைந்துள்ளன.
தங்களது இந்திய வருகையில் இருக்கும் இந்த தடையை தான் நிறுவனர் எலான் மஸ்க் மிகவும் ஆதங்கத்துடன், பிரபல யுடியூப்பர் மதன் கௌரியின் வேண்டுக்கோளிற்கு பதிலாக கூறியுள்ளார். இதுக்குறித்த எலானின் டுவிட்டர் பதிவில், "நாங்கள் அவ்வாறு செய்யவே விரும்புகிறோம்.
ஆனால் இறக்குமதி வரிகள் உலகில் எந்தவொரு பெரிய நாட்டையும் விட மிக அதிகமாக இங்கு உள்ளது. மேலும், தூய்மையான எரிசக்தி வாகனங்கள் மற்றும் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்கள் ஒரே தராசில் எடைப்போடப்படுகின்றன.
இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை" என கூறப்பட்டுள்ளது. மேலும், "ஆனால் மின்சார வாகனங்களுக்கு குறைந்தப்பட்சம் தற்காலிக நிவாரண உதவி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என மற்றொரு ட்விட்டில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பெரும்பாலும் இந்தியாவில் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முழுவதுமாக வெளிநாட்டில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அவற்றின் கார்களுக்கு அதிகப்படியான வரி விதிப்பது வழக்கமே.
இருப்பினும் இந்தியாவை தாயகமாக கொண்டு செயல்படும் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால், அவற்றின் விற்பனையில் பெரிய அளவில் தடையில்லாமல் இத்தனை வருடங்களாக இருந்து வருகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலில், நடப்பு 2021ஆம் வருடத்தில் இந்தியாவில் விற்பனையை துவங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம், வாகன இறக்குமதியில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி வரியை 40% குறைக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கும், இந்தியாவின் முதன்மையான சிந்தனை தொட்டியாக விளங்கும் நிடி அயோக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ரூ.30 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கார்கள் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவதற்கு 60% வரியும், ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 100% வரியும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.