Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரசு அலுவலக வளாகத்திற்குள் இந்த நிறுவனத்தின் கார் மட்டும் நுழைய தடை! அதிரடியால் குறிப்பிட்ட கார் பயனர்கள் அவதி
அரசு அலுவலக வளாகத்திற்குள் குறிப்பிட்ட நிறுவனத்தின் கார் மட்டும் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. எங்கு இந்த விநோத தடை நிலவுகின்றது?, எந்த நிறுவனத்தின் தயாரிப்பு இதனால் பாதிப்பைச் சந்திதித்து வருகின்றது?, என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மின்சார சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களையே அரசு அலுவலகங்களுக்குள் நுழைய தடை என்ற உத்தரவு வாய்மொழியாக கூறப்பட்டிருக்கின்றது. இந்த விநோத தடை நடவடிக்கை சீன நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முன்னதாக மிலிட்டரி கேம்ப் பகுதிகளுக்குள் இக்கார் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அரசு அலுவலகங்கள் செயல்படும் வளாகங்களுக்கும் நுழையவும் டெஸ்லா மின்சார கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தானியங்கி மின்சார கார்களை பயன்படுத்தி வரும் சில சீன அரசு பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட தொடங்கியிருக்கின்றனர். அவர்களின் மேல் அதிகாரிகள், கார்களை அலுவலக வளாகத்திற்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு வரும்படி வாய்மொழியாக கூறியிருப்பதாக கூறப்படுகின்றது.
பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு மாகாணங்களில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகள் இந்த வாய்மொழி உத்தரவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது பற்றிய துள்ளியமான புள்ளி விபரம் கிடைக்கவில்லை.
கடந்த சில மாதங்களாகவே இந்த மாதரியான சில விநோத நடவடிக்கைகளுக்கு டெஸ்லா கார்களைப் பயன்படுத்தும் அரசு பணியாளர்கள் ஆளாகி வருகின்றனர். ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சீன அரசு வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
இருப்பினும், நாட்டின் சில முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவம் செயல்படும் பகுதிகளில் டெஸ்லா மின்சார கார்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இந்த விநோத தடைக்கு டெஸ்லா காரின் ஓர் தொழில்நுட்பம்தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?,.
ஆமாங்க, டெஸ்லா நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் தானியங்கி வசதியை வழங்கி வருகின்றது. டிரைவர் இல்லாமல் ஓட்டும் வசதி, அவசர கால தானியங்கி பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் இதன் வாயிலாக வழங்கப்படுகின்றன. இந்த அம்சமே அரசு அலுவலகங்களுக்குள் டெஸ்லா மின்சார கார்கள் நுழைய தடையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு தங்கள் நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்ககா உளவு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதுவே அறிவிக்கப்படா எதிர்ப்பை டெஸ்லா கார்கள் சந்திக்க காரணமாக அமைந்திருக்கின்றது. தானியங்கி அம்சத்திற்காக டெஸ்லா மின்சார கார்களில் பல செயற்கை நுண்ணறிவுக் கொண்ட கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதைக் கொண்டே அமெரிக்கா தங்களது ரகசியங்களை கண்கானிப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு டெஸ்லா நிறுவனம் முழுக்க முழுக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. தற்போது உலகளவில் அதிகம் மின்சார கார்கள் விற்பனையாகும் காராக சீனா இருக்கின்றது.
இங்கு டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் தனது உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள டெஸ்லா, அங்கு மாடல்3 மற்றும் மாடல் ஒய் ஆகிய பிரபலமான மின்சார கார்களை உற்பத்தி செய்து வருகின்றது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!