Just In
- 23 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 29 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் உற்பத்தி திட்டம் ரத்து: எலான் மஸ்க் அறிவிப்பு!
அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி திட்டம் ரத்து செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அதிதிறன் வாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனையில் இருக்கும் டெஸ்லா மின்சார கார்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மின்சார கார்களின் தலை எழுத்தை மாற்றி எழுதிய பெருமையும் டெஸ்லா நிறுவனத்திற்கு உண்டு.
இந்த நிலையில், அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த மாடல் எஸ் சொகுசு செடான் காரை உருவாக்கும் திட்டத்தை டெஸ்லா ஈடுபட்டு இருந்தது. மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் என்ற பெயரில் இந்த கார் குறிப்பிடப்பட்டது.
மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் காரைவிட இந்த பிளெய்ட் ப்ளஸ் எடிசன் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், உலக அளவில் இந்த கார் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் மின்சார கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்தது. கொரோனா பிரச்னை காரணமாக, அடுத்த ஆண்டுக்கு இந்த காரின் அறிமுகம் தள்ளிப்போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், மாடல் எஸ் பிளெய்ட் ப்ளஸ் எடிசன் காரின் உற்பத்திக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் சமூக ஊடகம் மூலமாக அறிவித்துள்ளார்.
அதாவது, மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் மாடலே மிகச் சிறப்பான ரேஞ்ச் கொண்டதாக இருப்பதால், பிளெய்ட் ப்ளஸ் மாடலை களமிறக்கும் திட்டத்தை கைவிடுவதாகவும் அவர் காரணம் தெரிவித்துள்ளார். இது டெஸ்லா பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனிடையே, உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடலாக கூறப்படும் டெஸ்லா மாடல் எஸ் பிளெய்ட் எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிப் பணிகள் வரும் 10ந் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிடும் என்பதுடன் குவார்ட்டர் மைல் தொலைவை 9.3 வினாடிகளில் கடந்துவிடுமாம்.
இந்த மாடல் எஸ் பிளெய்ட் எடிசன் கார் மூன்று உயர் திறன் கொண்ட மின்சார மோட்டார்களுடன் வருகிறது. அதிகபட்சமாக 1020 பிஎச்பி பவரை வழங்கும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை வாய்ந்தது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று டெஸ்லா மார் தட்டுகிறது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!