Just In
- 47 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெஸ்லாவிற்கு 1,000 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளதா குஜராத் அரசு? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!!
டெஸ்லா நிறுவனத்திற்கு 1,000 ஏக்கர் நிலங்களை வழங்க குஜராத் அரசாங்கம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் டெஸ்லா நிறுவனம் அதன் இந்திய தலைமையகத்தை அமைக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேநேரம் பெங்களூர் உள்பட மும்பை, டெல்லி என வெவ்வேறான நகரங்களில் டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவவும் இந்த எலக்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அடுத்து என்ன தொழிற்சாலையை கட்டமைப்பதற்கு தேவையான இடம் தான். அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவை தங்களது மாநிலத்திற்கு கொண்டுவர கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது, டெஸ்லா நிறுவனம் லோக்கல் தொழிற்சாலை பணிகளை மேற்கொள்வதற்காக 1,000 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது என குஜராத் அரசாங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
Source: Indian Express
இந்த செய்தியில், அந்த குஜராத் அரசாங்க மூத்த நிர்வாகி, "அவர்கள் (டெஸ்லா) தொலைவில் உள்ள குஜராத்திற்கு வர வேண்டுமா அல்லது பெங்களூரிலேயே ஆழமாக கால் பதிக்கலாமா என்பதில் இன்னும் தீர்மானமாக இல்லை.
அவர்கள் குஜராத்தில் பெங்களூருக்கு இணையான சமூக வாழ்க்கை இல்லை என நினைக்கின்றனர். மேலும், அவர்கள் குஜராத் மற்றும் கர்நாடக அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர்" என கூறியதாக பதிவிட்டுள்ளனர்.
இந்த அமெரிக்க இவி பிராண்ட் கடந்த 2021 ஜனவரி 8ஆம் தேதி தன்னை டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என பெங்களூரில் பதிவு செய்து கொண்டதன் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கால்பதித்தது.
ஏற்கனவே கூறியதுதான், குஜராத் மட்டுமின்றி மஹாராஷ்டிரா அரசாங்கமும் டெஸ்லாவை தங்களது மாநிலத்தின் பக்கம் இழுக்க விருப்பப்படுகிறது. இதற்காக மஹாராஷ்டிரா அரசாங்கமும் தங்களது மாநிலத்தில் டெஸ்லாவிற்கு நிலத்தை வழங்க தயாராக உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இருப்பினும் மஹாராஷ்டிரா அரசாங்கத்துடனான டெஸ்லாவின் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஏனெனில் டெஸ்லா நிர்வாகிகள் மும்பை பெருநகர மண்டலத்தில் மிக பெரிய சார்ஜிங் நிலையங்களை கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதில் ஒன்று கார்களை கப்பலில் இருந்து இறக்குமதி செய்ய ஏதுவாக ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் நிறுவ அனுமதியளிக்க டெஸ்லா மஹாராஷ்டிரா அரசாங்கத்தை கேட்டு வருகிறது. இந்தியாவில் டெஸ்லா கூட்டணி வைத்துள்ள 27 விற்பனையாளர்களில் கிட்டத்தட்ட 20 பேர் மஹாராஷ்டிராவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!