Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!
ஒரு வருட-காலாண்டில் டெஸ்லா அதன் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கையை இந்த 2021ஆம் மூன்றாம் கால்பகுதியில் அடைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நடப்பு 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (ஜூலை- செப்டம்பர்) விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவின் ஆதிக்கத்தை பறைச்சாற்றுவதாக உள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட உலகளவில் 241,300 வாகனங்களை டெஸ்லா விற்பனை செய்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட இந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்களில், மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்கள் மட்டுமே மொத்தம் 237,823 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.
மீதி 9,275 யூனிட்களில், மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்கள் அடங்குகின்றன. ஒரே ஆண்டின் காலாண்டில் டெஸ்லா நிறுவனம் அதிகப்பட்சமாக விற்பனை செய்துள்ள கார்கள் எண்ணிக்கை இதுதான் என ஏற்கனவே கூறிவிட்டோம். முன்னதாக இந்த சாதனையை இந்த 2021ஆம் இரண்டாம் பகுதியிலேயே டெஸ்லா எட்டி இருந்தது.
நடப்பாண்டின் இரண்டாம் கால்பகுதியில் 201,250 டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையை இம்முறை மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்களே முறியடித்துவிட்டன. 2021 மூன்றாம் காலாண்டில் தயாரிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில், மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்கள் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் சற்று குறைவாக 228,882 யூனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் தான் தற்போதைக்கு உலகளவில் சிறப்பாக விற்பனை செய்யப்படும் டெஸ்லாவின் பிரதான மாடல்களாக விளங்குகின்றன. மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்கள் கடந்த 3 மாதங்களில் வெறும் 8,941 யூனிட்கள் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தத்தளித்து வருகின்றன.
ஆனால் இந்த அமெரிக்க இவி தயாரிப்பு நிறுவனம் இந்த நெருக்கடியால் பெரிதாக எந்த பாதிப்பையும் அடைந்தது போன்று தெரியவில்லை. அமெரிக்காவில் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா, இந்த சூழலை கருத்தில் கொண்டு தனது கார்களில் புதிய மைக்ரோ கண்ட்ரோலர்களை கொண்டுவந்தது.
அதேபோல் புதிய சிப்-செட்களுக்கு இணக்கமானதாக மென்பொருள் திருத்தப்பட்டன. டெஸ்லா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் அதன் தயாரிப்பு பணிகளில் எந்த தடையும் வராமல் பார்த்து கொண்டன. தற்சமயம் அமெரிக்காவில் டெக்ஸாஸிலும், ஜெர்மனியில் பெர்லினிலும் தனது ஜிகா தொழிற்சாலையை கட்டமைக்கும் பணியில் டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது.
டெஸ்லாவின் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றவுள்ள இந்த தொழிற்சாலைகளில் தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அதேநேரம் சில புதிய மாடல்களின் அறிமுகங்களிலும் டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது. இதன்படி 2023ஆம் ஆண்டிற்குள் புதிய தலைமுறை ரோட்ஸ்டர் மற்றும் சைபர் ட்ரக் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இந்திய சந்தையில் நுழைய டெஸ்லா பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது. முற்றிலுமாக கார்களை இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து தயாரிக்க விரும்பும் டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்களை நம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஈடுப்படுத்தி வருவது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதனால் முதலாவதாக இந்திய சந்தைக்கு இந்த இரு எலக்ட்ரிக் கார்கள் தான் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். இவற்றை வெளிநாட்டு தொழிற்சாலைகளில் தயாரித்து சிபியூ முறையில் இறக்குமதி செய்தும் நம் நாட்டில் விற்பனை செய்யலாம். ஆனால் இந்த முறையினால் காரின் விலையினை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் டெஸ்லாவிற்கு உருவாகும்.
இதனால் தான் இந்தியாவிலேயே தொழிற்சாலையை அமைத்து கொள்ள மத்திய அரசாங்கமும் டெஸ்லாவை கேட்டு கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் டெஸ்லா தொழிற்சாலை அமையும் என்பது தற்போதைக்கு கேள்வியாக உள்ளது. டெஸ்லாவை தன் பக்கம் இழுக்க தமிழக அரசும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் டெஸ்லாவின் இந்திய தொழிற்சாலை கர்நாடகாவில் அமைவதற்கே வாய்ப்புகள் உள்ளதாம்.