Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கை நழுவிய வாய்ப்பு! போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டிய டெஸ்லா!
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் இப்போதே இக்காரை பெறுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக மிக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவலை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்தனர். இந்த நிலையில் இந்நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்பதே பெருத்த சந்தேகமாக இருந்து வந்தது.

உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கான அழைப்பை பல மாதங்களுக்கு முன்பே தமிழகம் விடுத்திருந்த நிலையில், போட்டியாக மஹாராஷ்டிரா மாநிலமும் இதற்கான அழைப்பை டெஸ்லாவிற்கு கொடுத்திருந்தது. ஆனால், டெஸ்லா நிறுவனமே தங்களின் ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப மையத்தை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இது இந்தியர்களுக்கு மேலும் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரு மாநில அரசுகளும் போட்டிக் கொண்டிருக்கின்ற வேலையில் அதன் பார்வை கர்நாடகா பக்கம் திரும்பியது வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் இந்த மூன்று மாநிலங்களில் எந்த மாநிலத்தில் டெஸ்லா உற்பத்தி ஆலை தொடங்கப்படும் என்ற கேள்வியெழும்பியது. இந்த கேள்விக்கே தற்போது முற்று வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை கர்நாடகாவில் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா பதிவு செய்த விண்ணப்பத்தின் வாயிலாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆர்&டி யூனிட்டிலேயே இந்நிறுவனம் தயாரிப்பு ஆலையை தொடங்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் கூறியாதவது, "பசுமை இயக்கத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா விரைவில் இந்தியாவில் பெங்களூருவின் ஆர்&டி பிரிவில் தனது செயல்பாடுகளை தொடங்கவுள்ளார். நான் எலன்மஸ்கினை இந்தியா மற்றும் கர்நாடகாவிற்கு வரவேற்கிறேன், அவருக்கு நல்வாழ்த்துக்கள்" என கூறியிருக்கின்றார்.

கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2021ம் ஆண்டில் கால் தடம் பதிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.