கை நழுவிய வாய்ப்பு! போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டிய டெஸ்லா!

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

இந்தியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் இப்போதே இக்காரை பெறுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக மிக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

இந்த தகவலை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்தனர். இந்த நிலையில் இந்நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்பதே பெருத்த சந்தேகமாக இருந்து வந்தது.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கான அழைப்பை பல மாதங்களுக்கு முன்பே தமிழகம் விடுத்திருந்த நிலையில், போட்டியாக மஹாராஷ்டிரா மாநிலமும் இதற்கான அழைப்பை டெஸ்லாவிற்கு கொடுத்திருந்தது. ஆனால், டெஸ்லா நிறுவனமே தங்களின் ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப மையத்தை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

இது இந்தியர்களுக்கு மேலும் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரு மாநில அரசுகளும் போட்டிக் கொண்டிருக்கின்ற வேலையில் அதன் பார்வை கர்நாடகா பக்கம் திரும்பியது வியப்பை ஏற்படுத்தியது.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

இந்த நிலையில்தான் இந்த மூன்று மாநிலங்களில் எந்த மாநிலத்தில் டெஸ்லா உற்பத்தி ஆலை தொடங்கப்படும் என்ற கேள்வியெழும்பியது. இந்த கேள்விக்கே தற்போது முற்று வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை கர்நாடகாவில் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

டெஸ்லா பதிவு செய்த விண்ணப்பத்தின் வாயிலாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆர்&டி யூனிட்டிலேயே இந்நிறுவனம் தயாரிப்பு ஆலையை தொடங்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார்.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

இதுகுறித்து அவர் கூறியாதவது, "பசுமை இயக்கத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா விரைவில் இந்தியாவில் பெங்களூருவின் ஆர்&டி பிரிவில் தனது செயல்பாடுகளை தொடங்கவுள்ளார். நான் எலன்மஸ்கினை இந்தியா மற்றும் கர்நாடகாவிற்கு வரவேற்கிறேன், அவருக்கு நல்வாழ்த்துக்கள்" என கூறியிருக்கின்றார்.

கை நழுவிய வாய்ப்பு... போட்டியில் வென்றது கர்நாடகா... தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டி டெஸ்லா...

கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2021ம் ஆண்டில் கால் தடம் பதிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla's EV Manufacturer Plant Is Set To Be Located In Karnataka. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X