Just In
- 53 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்னும் ஒரே நாள்தான் இருக்கு! இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த டொயோட்டா திட்டம்! எந்த மாடல் அது?
டொயோட்டா நிறுவனம் இந்தியர்களின் பிரியமான ஓர் கார் மாடலின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. உற்பத்தி மற்றும் வாகன கட்டுமானத்திற்கு உதவக் கூடிய பொருட்களின் விலை அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டொயோட்டா நிறுவனமும் அதன் புகழ்வாய்ந்த ஓர் கார் மாடலின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மற்றும் இந்தியர்களின் விருப்பமான கார் மாடல்களில் ஒன்றான இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி காரின் விலையே விரைவில் அதிகரிக்கப்பட இருக்கின்றது.
வரும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் இக்கார் புதிய விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் கூறியிருக்கின்றது. ஆகையால், இன்று மற்றும் நாளை மட்டுமே ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் பழைய விலையில் டொயோட்டா இன்னோவா விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.
தற்போது இந்தியாவில் டொயோட்டா இன்னோவா எம்பிவி ரூ. 16.52 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 24.59 லட்சம் ஆகும். புதிதாக எவ்வளவு விலை உயர்த்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய துள்ளியமான தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. அதேசமயம், 2 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட இருப்பதாக நிறுவனம் அறிவிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளது.
இந்த விலையுயர்வு ஆகஸ்டு 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பின் வாயிலாக நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி கார் 18 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அடிநிலை வேரியண்ட் 2.7 லிட்டர் ஜிஎக்ஸ்-7 பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும், உயர்நிலை வேரியண்டுகள் 2.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதில் டீசல் எஞ்ஜின் 7 இருக்கை மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வாகனங்களை உற்பத்தி செய்யும் உலோகம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் பிற உதிரிபாகங்கள் ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்ற காரணத்தினால் இவ்விலை உயர்வு பற்றிய அறிவிப்பை டொயோட்டா வெளியிட்டிருக்கின்றது.
விலையுயர்வின் தாக்கத்தை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு திணிக்கக் கூடாது என்பதில் டொயோட்டா மிக அதிக கவனத்துடன் இருக்கின்றது. இதனடிப்படையிலேயே 2 சதவீத உயர்வை மட்டுமே செய்ய இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. இத்துடன், கார்களின் விலையுயர்வை பகுதி பகுதியாக மேற்கொள்ளவும் அது திட்டமிட்டுள்ளது.
ஆகையால், மிக விரைவில் மற்றுமொரு விலையுயர்வை இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கார்களின் விலையுயர்வை டொயோட்டா நிறுவனம் மட்டுமே இந்தியாவில் செய்யவில்லை. அண்மையில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்தின என்பது குறிப்பிட்டத்தகுந்தது.
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!