Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்னும் ஒரே நாள்தான் இருக்கு! இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த டொயோட்டா திட்டம்! எந்த மாடல் அது?
டொயோட்டா நிறுவனம் இந்தியர்களின் பிரியமான ஓர் கார் மாடலின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. உற்பத்தி மற்றும் வாகன கட்டுமானத்திற்கு உதவக் கூடிய பொருட்களின் விலை அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டொயோட்டா நிறுவனமும் அதன் புகழ்வாய்ந்த ஓர் கார் மாடலின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மற்றும் இந்தியர்களின் விருப்பமான கார் மாடல்களில் ஒன்றான இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி காரின் விலையே விரைவில் அதிகரிக்கப்பட இருக்கின்றது.
வரும் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் இக்கார் புதிய விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் கூறியிருக்கின்றது. ஆகையால், இன்று மற்றும் நாளை மட்டுமே ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் பழைய விலையில் டொயோட்டா இன்னோவா விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.
தற்போது இந்தியாவில் டொயோட்டா இன்னோவா எம்பிவி ரூ. 16.52 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 24.59 லட்சம் ஆகும். புதிதாக எவ்வளவு விலை உயர்த்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய துள்ளியமான தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. அதேசமயம், 2 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட இருப்பதாக நிறுவனம் அறிவிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளது.
இந்த விலையுயர்வு ஆகஸ்டு 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பின் வாயிலாக நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி கார் 18 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அடிநிலை வேரியண்ட் 2.7 லிட்டர் ஜிஎக்ஸ்-7 பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும், உயர்நிலை வேரியண்டுகள் 2.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதில் டீசல் எஞ்ஜின் 7 இருக்கை மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வாகனங்களை உற்பத்தி செய்யும் உலோகம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் பிற உதிரிபாகங்கள் ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்ற காரணத்தினால் இவ்விலை உயர்வு பற்றிய அறிவிப்பை டொயோட்டா வெளியிட்டிருக்கின்றது.
விலையுயர்வின் தாக்கத்தை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு திணிக்கக் கூடாது என்பதில் டொயோட்டா மிக அதிக கவனத்துடன் இருக்கின்றது. இதனடிப்படையிலேயே 2 சதவீத உயர்வை மட்டுமே செய்ய இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. இத்துடன், கார்களின் விலையுயர்வை பகுதி பகுதியாக மேற்கொள்ளவும் அது திட்டமிட்டுள்ளது.
ஆகையால், மிக விரைவில் மற்றுமொரு விலையுயர்வை இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கார்களின் விலையுயர்வை டொயோட்டா நிறுவனம் மட்டுமே இந்தியாவில் செய்யவில்லை. அண்மையில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்தின என்பது குறிப்பிட்டத்தகுந்தது.