Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இனி தரமான உதிரி பாகங்கள் வீடு தேடி வரும்... நாட்டின் 12 நகரங்களில் சேவையை தொடங்கியது டொயோட்டா...
உதிரி பாகங்களை வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் சேவையை டொயோட்டா இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் டொயோட்டாவும் ஒன்று. இந்த நிறுவனமே வீட்டுக்கே வந்து உதிரிபாகங்களை வழங்கும் சேவையை நாட்டில் தொடங்கியுள்ளது. தனது ஜென்யூன் (நேர்மையான) உதிரி பாகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சேவையை இந்தியாவில் டொயோட்டா தொடங்கியுள்ளது.
'டொயோட்டா பார்ட்ஸ் கன்னெக்ட்' எனும் திட்டத்தின் வாயிலாக இந்த சேவையை தொடங்கியுள்ளது. சந்தையில் புழக்கத்தில் இருக்கும் போலி பாகங்களை ஒழிக்கும் பொருட்டும் இந்த சேவையை நாட்டில் டொயோட்டா தொடங்கியிருக்கின்றது.
புதிய சேவை தொடங்கியதுகுறித்து நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான நவீன் சோனி கூறியதாவது, "இந்த முயற்சியைத் தொடங்குவதன் மூலம், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் எங்கள் உறுதிப்பாட்டை நோக்கி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.
வாகனங்களின் பாதுகாப்பில் உண்மையான பாகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவேதான் எங்கள் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் இச்சேவை இந்தியாவில் தொடங்கியுள்ளோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் மன அழுத்தமில்லாத சேவை வழங்க உதவும்" என தெரிவித்தார்.
இச்சேவையின் வாயிலாக உதிரிபாகங்கள் மட்டுமின்றி கார்களை பராமரிக்க உதவும் அத்தியாவசிய பொருட்களையும் விற்பனைச் செய்ய இருக்கின்றது. தொடர்ந்து, எஞ்ஜின் ஆயில், டயர் பேட்டரி உள்ளிட்ட பொருட்களையும் வீட்டுக்கே வந்து டொயோட்டா டெலிவரி செய்ய இருக்கின்றது.
இந்த சிறப்பு சேவையை நாட்டின் குறிப்பிட்ட 12 நகரங்களில் மட்டுமே டொயோட்டா தொடங்கியுள்ளது. நடப்பாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் டோர் டெலிவரி சேவையைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. டோர் டெலிவரி சேவையைப் பெற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தை நாட நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக அதி வேகத்தில் புக் செய்யப்படும் வாகன உதிரிபாகங்களை நிறுவனம் உரிய நேரத்தில் டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பவும் அதன் டெலிவரிகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைக்க இருக்கின்றது. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்து கொள்ளே இங்கே க்ளிக் செய்யவும்.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!