Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!
இந்தியாவில் கடந்த நவம்பர் மாத கார்கள் விற்பனையில் சுமார் 53% வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடைந்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான டொயோட்டா கடந்த 2021 நவம்பர் மாதத்தில் மொத்தம் 13,003 யூனிட் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 53% அதிகமாகும்.
ஏனெனில் அந்த மாதத்தில் 8,508 கார்களையே டொயோட்டா நம் நாட்டில் விற்பனை செய்திருந்தது. உண்மையில் கடந்த சில மாதங்களாகவே டொயோட்டா கார்களின் விற்பனை இந்திய சந்தையில் சிறப்பானதாக இருந்து வருகிறது. கடந்த 2021 அக்டோபர் மாதத்திலும் கடந்த நவம்பர் மாத விற்பனையை காட்டிலும் வெறும் 5% மட்டுமே குறைவாக 12,440 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் இத்தகைய வளர்ச்சி அடைந்திருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை நிர்வாக இயக்குனர் வைஸ்லைன் சிகாமணி கருத்து தெரிவிக்கையில், சந்தையில் இருந்து தேவை தொடர்ந்து வலுவாக கிடைத்து வருகிறது. இது எங்கள் முன்பதிவு ஆர்டர்களில் சரியாக பிரதிபலிக்கிறது.
மேலும் இந்த ஆர்டர்களை பூர்த்தி செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தேவை & ஆர்டர்கள் ஆகிய இரண்டின் அதிகரிப்புக்கு, எங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே உள்ள பிரபலம் காரணமாக இருக்கலாம். மேலும் புதிய லெஜண்டர் 4x4 மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா லிமிடெட் எடிசன் உள்ளிட்ட சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகள் மேலும் உதவுகின்றன.
ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டும் அந்தந்த பிரிவுகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. எங்கள் பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. டொயோட்டா பிராண்டிற்கு புதியவைகளான க்ளான்ஸா & அர்பன் க்ரூஸர் உட்பட அனைத்து பிரிவுகளிலும் விற்பனையில் வளர்ச்சியுடன் இந்த காலண்டர் ஆண்டை நிறைவு செய்வோம் என்று நம்புகிறோம்.
எவ்வாறாயினும், இரண்டு மாடல்களுக்கும் பெற்ற நேர்மறையான வரவேற்புடன், தொலைத்தூர இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களை அணுகுவதற்கு எங்களால் முடிந்தவரை முயற்சித்து வருகிறோம் என்றார். வைஸ்லைன் சிகாமணி கூறியதுபோல், ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய வெளியேற்றதால், எண்டேவியரின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, ஃபார்ச்சூனர் அதன் பிரிவிலேயே சிறந்த விற்பனை மாடலாக உருவெடுத்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமாக இருப்பினும், இந்திய சந்தையில் டொயோட்டாவிற்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. ஏனெனில் சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் 1999இல் இந்தியாவில் தொழிற்சாலை பணிகளை துவங்கிய டொயோட்டா இதற்காக கர்நாடகா மாநிலத்தில் பிடாடி என்கிற பகுதியில் தொழிற்சாலையினை நிறுவியது.
அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளிலும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் டொயோட்டா, இந்தியாவில் ஃபார்ச்சூனர் & இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை தவிர்த்து, பட்ஜெட் ரக கார்களை விற்பனை செய்ய போராடி கொண்டுதான் வருகிறது. இதனாலேயே நஷ்டத்தை தவிர்க்க, பிரபலமான சுஸுகி கார்களின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா உள்ளது.
இந்த வகையில் க்ளான்ஸா (மாருதி சுஸுகி பலேனோ) மற்றும் அர்பன் க்ரூஸர் (விட்டாரா பிரெஸ்ஸா) என்ற சுஸுகி ரீ-பேட்ஜ்டு கார்கள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி எதிர்காலத்தில் மேலும் சில கார்களை கொண்டுவர டொயோட்டா தயாராகி வருகிறது. இதில் முதலாவதாக எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்சனான ரூமியன், டொயோட்டா பிராண்டில் இருந்து வெளிவரலாம் என எதிர்பார்க்கிறோம்.
ரூமியன், தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் பெயராகும். இந்தியாவிலும் இதே பெயரில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக காப்புரிமை படம் ஒன்று வெளியாகி இருந்தது. ரூமியனிலும் எர்டிகாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. மேலும் சிஎன்ஜி தேர்வும் கொடுக்கப்படலாம்.
எர்டிகாவின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் மட்டுமின்றி சுஸுகியின் செடான் மாடலான சியாஸின் ரீ-பேட்ஜ்டு வெர்சனும் எதிர்காலத்தில் டொயோட்டா பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டொயோட்டா செடான் காரின் பெயர் பெல்டா என அழைக்கப்பட உள்ளதாம். இவை மட்டுமல்ல, அர்பன் க்ரூஸரின் புதிய தலைமுறையையும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த டொயோட்டா தயாராகி வருகிறது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு