Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெங்களூர் கார் ஆலையை 3 வாரங்கள் மூடுகிறது டொயோட்டா... ஏமாற்றத்தில் வாடிக்கையாளர்கள்!
பராமரிப்புப் பணிகளுக்காக பெங்களூர் அருகே செயல்பட்டு டொயோட்டா கார் ஆலை மூன்று வாரங்களுக்கு மூடப்பட உள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களின் டெலிவிரிப் பணிகளில் சற்று தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வரும் 26ந் தேதி முதல் மே 14ந் தேதி வரை கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட உள்ளது. ஆலையில் உள்ள எந்திரங்கள் உள்ளிட்டவற்றிற்கான வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.
ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது கொரோனாவுக்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா பரவலை தவிர்க்கும் முயற்சிகளும் கடைபிடிக்கப்படும்.
கார் ஆலை மூடப்படுவதால் இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் உள்ளிட்ட முன்னணி மாடல்களின் உற்பத்தி மூன்று வாரங்களுக்கு இருக்காது. எனவே, இருப்பு உள்ள கார்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அண்மையில் புக்கிங் செய்தவர்கள், புதிதாக புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் கார்கள் மற்றும் மாருதி நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் டொயோட்டா க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் எஸ்யூவி கார்களின் டெலிவிரிப் பணிகளில் எந்த பிரச்னையும் இருக்காது.
கொரோனா பரவல் காரணமாக, டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் கார் ஆலைகளில் உற்பத்தி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஆலைகளை தற்காலிகமாக மூடி வைத்துள்ளது. அதேபாணியில், டொயோட்டா நிறுவனமும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு ஆலைகளை தற்காலிகமாக மூடி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த சமயத்தில் பராமரிப்புப் பணிகளை முடித்து விடுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!