Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நார்டன் பைக்குகள் இந்தியா வருவது உறுதி!! முதலில் வரும் 4 மோட்டார்சைக்கிள்கள் இவைதான்...
நார்டன் மோட்டார்சைக்கிள் பிராண்ட் இந்திய சந்தைக்கு வருவது உறுதியாகிவிட்டது. நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்களுக்கு வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்டன் பிராண்டை கையகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது தான் நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டார்சைக்கிள் உலகில் நார்டன் மோட்டார்சைக்கிள்கள் மிகவும் பணக்காரர்களால் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.
இதனால் தான் என்னவோ இந்த மோட்டார்சைக்கிள் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பிராண்டை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட் என்பதால் வாங்க பல நிறுவனங்கள் முன் வந்தன.
இறுதியில் நமது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 16 மில்லியன் க்ரேட் பிரட்டன் பவுண்ட் (கிட்டத்தட்ட ரூ.150.77 கோடி) தொகையில் ஏலத்தை முடித்து கொண்டுள்ளது. இந்த ஏலத்தொகையின் மூலமாக நார்டன் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க புதிய தொழிற்சாலை மற்றும் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளன.
பிராண்டை வாங்கியவுடன் தற்போதைய நிலைமையை உணர்ந்து தற்போதைக்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்படாது என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்பே இந்தியாவில் நார்டன் மோட்டார்சைக்கிள்கள் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக முத்திரை தாக்கல் செய்யப்பட்ட நான்கு நார்டன் மோட்டார்சைக்கிள்கள் கமெண்டோ, அட்லாஸ், ஃபாஸ்ட்பேக் மற்றும் மேங்க்ஸ் என்பன ஆகும்.
இந்திய சந்தைக்கு நார்டன் கமெண்டோ ஒன்றும் புதியது கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு விற்பனையில் இருந்தது. இதில் பொருத்தப்படுகின்ற 961சிசி, இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 80 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.
நார்டன் அட்லாஸ், பழமையான ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளின் தோற்றத்தை கொண்டது. ட்யுல்-பர்பஸ் டயர்களுடன் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற மோட்டார்சைக்கிளான இதில் பொருத்தப்படுகின்ற என்ஜின் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியதாக உள்ளது.
நார்டன் ஃபாஸ்ட்பேக் இதுவரையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது இல்லை. 1970களில் ஃபாஸ்ட்பேக், கமெண்டோ மாடலின் ஒரு வேரியண்ட்டாகவே இருந்தது. நார்டன் மேங்க்ஸ் மோட்டார்சைக்கிள்கள் 1946ல் இருந்து 1962 வரையில் வெளிநாடுகளில் விற்பனையில் இருந்தன.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!