Just In
- 1 hr ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 1 hr ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 2 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வரும் தீபாவளிக்கு டெலிவிரி எடுக்க ஏற்ற 5 புதிய எஸ்யூவி கார்கள்!! பழைய காரை விற்கும் நேரம் வந்தாச்சு!
இந்தியாவில் வருட இறுதி பண்டிகை காலம் துவங்கிவிட்டது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கடந்துவிட்ட நிலையில், தீபாவளி, ஆயுத பூஜை, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்த அக்டோபர் மாதத்தில் வரவுள்ளன.
பொதுவாக நமது இந்தியர்கள் மற்ற நாட்களை காட்டிலும் பண்டிக்கை நாளில் காரை டெலிவிரி எடுக்கவே விரும்புவர். இது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் கொரோனா இரண்டாவது அலையால் சரிந்த விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் சரிக்கட்ட தயாராகி வருகின்றன.
மேலும் இந்த பண்டிகை காலத்திற்காக ஸ்கோடா, கியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில், இந்த பண்டிகை நாட்களில் வாங்குவதற்கு ஏற்ற எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
டாடா பஞ்ச்
மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படியோ தெரியவில்லை, ஆனால் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இந்தியர்களை பண்டிகை காலத்தில் கவர்வதில் எப்போதுமே தயாராக இருக்கும். இதன்படி டாடா பிராண்டில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி இந்த அக்டோபரில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த புதிய டாடா காருக்கான முன்பதிவுகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால் சில டீலர்ஷிப் மையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில், ரூ.21,000 என்கிற டோக்கன் தொகை உடன் முன்பதிவுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, டாடா பஞ்ச் எஸ்யூவியை முன்பதிவு செய்ய விருப்பப்படுபவர்கள் அருகில் உள்ள டாடா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700
5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கொண்டுவரப்படும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 அடுத்த அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 5-இருக்கை வெர்சனுக்கான விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
எம்.எக்ஸ், ஏஎக்ஸ்3, ஏஎக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ்7 என்ற நான்கு விதமான ட்ரிம்களில், மொத்தம் 34 வேரியண்ட்களில் புதிய எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை வெர்சனாக கொண்டுவரப்படும் இந்த எஸ்யூவி வாகனத்தில் 2.2 லிட்டர் டர்போ டீசல் & 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.
எம்ஜி அஸ்டர்
அஸ்டர், இந்த 2021ஆம் வருடத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும் மிக முக்கியமான எஸ்யூவி கார். இந்த புதிய எம்ஜி காரின் அறிமுக தேதியோ, அல்லது முன்பதிவு துவங்கவுள்ள தேதியோ தற்போது வரையில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த எஸ்யூவி காரின் அறிமுகத்தை வருகிற அக்டோபரில் எதிர்பார்க்கிறோம்.
ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி என்கிற ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட உள்ள எம்ஜி அஸ்டரை 5 விதமான நிறத்தேர்வுகளில், இரு பெட்ரோல் & 1 டீசல் என்ஜின் தேர்வுகளில் வாங்கலாம். இந்த எம்ஜி எஸ்யூவி காரில் மிக முக்கிய அம்சமாக நிலை-2 தானியங்கி ஓட்டுனர் உதவி தொழிற்நுட்பங்கள் அதன் பிரிவிலேயே முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஃபோர்ஸ் குர்கா
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய தலைமுறை குர்கா ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை இந்திய சந்தையில் வெளியீடு செய்திருந்தது. மஹிந்திரா தார் வாகனத்திற்கு போட்டியாக வரும் இதன் விலைகள் இந்த செப்டம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், டெலிவிரிகள் 2021 அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளன.
மேம்படுத்த ஸ்டைலில், கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஃபோர்ஸ் குர்காவில் பிஎஸ்6-க்கு இணக்கமான 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 91 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன்
ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து டைகுன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது. ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் இதுவரை 10,000-ஐ கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1.0 லிட்டர், 3-சிலிண்டர் டிஎஸ்ஐ (113 பிஎச்பி/ 175 என்எம்), 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ (148 பிஎச்பி/ 250 என்எம்) என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஃபோக்ஸ்வேகன் டைகுனில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் & 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் (1.5 லிட்டர் என்ஜின் உடன் மட்டும்) என்ற 3 டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!