Just In
- 29 min ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 1 hr ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 3 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Movies விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
குட் நியூஸ்... வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பிரச்னை காரணமாக, வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், லாக்டவுன் விதிகளிலும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இதனை மனதில் வைத்து வாகனங்களுக்கான பதிவுச் சான்று, தகுதிச் சான்று, வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களுக்கான காலாவதி காலம் வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் வரும் செப்டம்பர் 30 வரை காலாவதியாகும் வாகன ஆவணங்கள் செல்லத்தக்கத்தாக கருதப்படும். இதனால், வாகன ஓட்டிகள் தடையில்லாமல் செல்வதற்கும், தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்குமான வாய்ப்பை வழங்கும்.
கடந்த ஆண்டும் இதேபோன்று காலாவதியான வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆர்டிஓ அலுவலகங்கள் வழக்கமான பணியாளர் திறனுடன் செயல்படவில்லை என்பதால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கும், ஆர்டிஓ அலுவலக பணியாளர்களுக்கும் சற்று ஆசுவாசத்தை தரும் விஷயமாக இருக்கும். வரும் மாதங்களில் நிலைமை சீராகும்பட்சத்தில் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும் வாய்ப்பு இருக்கிறது.
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!