Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
இதுக்கு முடிவே இல்லையா... கொரோனாவால் பலத்த அடி... மே மாதத்திலும் வாகன விற்பனை பெரும் சரிவு!
கொரோனா இரண்டாவது அலையால் கடந்த மாதம் வாகன விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.
கடந்த ஆண்டு துவங்கிய கொரோனா பிரச்னையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்திலும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வாகனத் துறை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலம் முதல் சற்றே ஏறு முகத்தில் சென்ற வாகன விற்பனை கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல மாநிலங்களில் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வாகன விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து மே மாதத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் வாகன டீலர்கள் மூடப்பட்டுள்ளதுடன் வாகன உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டது காரணிகளாக உள்ளன.
அகில இந்தியா வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஏப்ரல் மாதத்தைவிட கடந்த மாதம் விற்பனை 55 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை 53 சதவீதமும், மூன்று சக்கர வாகன விற்பனை 76 சதவீதமும், பயணிகள் வாகன விற்பனை 59 சதவீதமும், டிராக்டர் விற்பனை 57 சதவீதமும், வர்த்தக வாகன விற்பனை 66 சதவீதமும் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 11,85,374 வாகனங்கள் ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 5,35,855 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 4,10,757 இருசக்கர வாகனங்களும், 21,636 மூன்று சக்கர வாகனங்களும், 85,733 பயணிகள் வாகனங்களும், 17,534 வர்த்தக ரக வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பல மடங்கு விற்பனை குறைந்துள்ளது.
எனினும், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், ஜூலை மாத மத்த்தியில் இருந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, வாகன விற்பனை படிப்படியாக மீள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பண்டிகை காலத்தில் வாகன விற்பனை இயல்புக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்த நம்பிக்கையுடன் தற்போதைய கடினமான காலத்தை வாகன விற்பனை நிறுவனங்களும், டீலர்களும் கடந்து வருகின்றனர்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!