Just In
- 22 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை முகாம்... ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பு
சிறப்பு சேமிப்புச் சலுகைகளுடன் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு பருவமழை காலத்திற்கான சிறப்பு பரிசோதனை முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
நாட்டின் சில பகுதிகளில் பருவமழை காலம் துவங்கி இருப்பதையடுத்து, கார்களுக்கு கூடுதல் பாரமரிப்பு தேவைப்படுகிறது. இதனால், கார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்கள் மூலமாக பராமரிப்பு சேவையை வழங்குகின்றன.
அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவமழை காலத்திற்கான சிறப்பு பரிசோதனை முகாமை அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களில் இந்த பருவமழை கால பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் கார்களுக்கு பருவமழை காலத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் 10 விதமான பரிசோதனைகள் கட்டணமில்லாமல் செய்யப்படும்.
குறிப்பாக, டயர், பேட்டரி உள்ளிட்டவற்றிருக்கும் சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படும். அதேபோன்று, பூஞ்சைகளை அழிக்கும் நடைமுறைகள் மற்றும் கிருமிநீக்க நடைமுறையும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும்.
இதன்மூலமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் உறுதி செய்யப்படும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், லாக்டவுன் காரணமாக, கார்கள் பல நாட்கள் நிறுத்தி வைக்கும் சூழல் இருப்பதால், இந்த பரிசோதனை முகாம் கூடுதல் மதிப்பை தரும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமையும்.
இதுதவிர்த்து, கூடுதல் வாரண்டி, சர்வீஸ் திட்டங்களுக்கான நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளையும் ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக, இந்த திட்டங்கள் காலாவதியாகும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு கூடுதல் பயன் தரும்.
இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா இயக்குனர் ஆசிஷ் குப்தா கூறுகையில்,"வாடிக்கையாளர்களஇன் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மிக முக்கியமானதாக பார்க்கிறோம். லாக்டவுன் அமலில் இருப்பதால் பெரும்பாலான வாகனங்களுக்கு தற்போது பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
இதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் கார்களை இயக்குவற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். எங்களது சிறந்த பரிசோதனைகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும், பாதுக்காப்பையும் மேம்படுத்தும்," என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள ஃபோக்ஸ்வேகன் கார் சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.