Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"பழைய வாகனத்தை எடைக்கு போட்டால் தள்ளுபடி கிடைக்கும்"... மத்திய அமைச்சர் தகவல்... எத்தன சதவீதம் தெரியுமா?
பழைய வாகனங்களை புதிய ஸ்கிராப் பாலிசி திட்டத்தின் வாயிலாக அழிப்போர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கின்றார். எத்தனை சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது. என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.
2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின்போது வார்த்தக மற்றும் பழைய வாகன உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வாகன அழிப்பு கொள்கை பற்றிய தகவலை மத்திய அரசு வெளியிட்டது. ஏற்கனவே இதுகுறித்த தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவ்வப்போது அறிவித்து வந்தநிலையில், இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையின்போது உறுதிப்படுத்தினார்.
20 வருடங்கள் பழைய தனிநபர் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதே இந்த புதிய வாகன அழிப்பு கொள்கை திட்டத்தின் சாரம்சமாகும். இதனை தன்னார்வம் என்று அரசு கூறினாலும், குறிப்பிட்ட ஆண்டுகளைக் கடந்து பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் கட்டாயம் தரசான்று (FC) பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் தனியங்கி பரிசோதனை மையங்கள் நிறுவப்பட இருப்பதாகவும் அரசு கூறியிருக்கின்றது. இங்கே, வாகனங்கள் தானியங்கி முறையில் பரிசோதனைச் செய்யப்படும். இங்கு வாகனங்கள் தேர்ச்சி பெற தவறினால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதோடு இல்லாமல் மிகப்பெரிய அபராதத் தொகையை அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கின்றார்.
ஆகையால், புதிய வாகன அழிப்பு கொள்கை திட்டம் தன்னார்வம் என்று கூறப்பட்டாலும் மத்திய அரசு போட்டிருக்கும் கிடுக்குப்பிடியால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குறிப்பாக, பழைய வின்டேஜ் மற்றும் பழைய வர்த்தக வாகனங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையில், லேசான ஆறுதல் அளிக்கும் வகையில் பழைய வாகனங்களை தாமாக முன் வந்து அழிப்போருக்கு சிறப்பு சலைகையை வழங்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கின்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது, புதிய வாகன அழிப்பு கொள்கைத் திட்டத்தின்கீழ் பழைய வாகனங்களை அழிக்க தாமாக முன்வரும் நபர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனை வாகன உற்பத்தி நிறுவனங்களே புதிய வாகனங்களை வாங்கும் போது வழங்கும் என அவர் கூறினார். இது பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனத்தை வாங்குவோர்க்கு பேருதவியாக அமையும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து, மிக முக்கியமாக பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால், தற்போது நலிவடைந்து காணப்படும் இந்திய வாகனத்துறையை விரைவில் இரட்டிப்பான லாபத்தைச் சந்திக்கவும் இது உதவும் என அவர் கூறினார்.
மேலும், வாகனங்கள் சார்ந்து இயங்கும் பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு நிறுவனங்களும் இதன்மூலம் வலிமடையும் கூறப்பட்டுள்ளது. தற்போது இருப்பதைக் காட்டிலும் 30 சதவீதம் வரை இந்திய வாகனத்துறை வளர்ச்சியடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றார். தற்போது, ஆண்டு ஒன்றிற்கு ரூ. 4.5 லட்சம் கோடி வரை வாகனத்துறை மூலம் நாடு வருவயாக ஈட்டி வருகின்றது.
அதுவே பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை திட்டம் நடைமுறைக்கு வருமேயானால் இது ரூ. 10 லட்சம் கோடியாக உயரும். இதன்மூலம் இந்தியா செழிப்பான நாடாக மாறும். தொடர்ந்து, வேலை வாய்ப்பு மற்றும் தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் 30-40 சதவீதம் வரை குறைந்த விலையில் வாகனங்கள் என பல்வேறு நலன்கள் மக்களை வந்து சேரும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!