Just In
- 31 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 37 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான மின்சார காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ போகும்!
சாலை ஓரமாக துருவிற்கு இரையாகிக் கொண்டிருந்த விண்டேஜ் கார் தற்போது மின்சார காராக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
விண்டேஜ் ரக வாகனங்களுக்கு எப்போதுமே இந்தியாவில் மவுசு அதிகம். அது இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி, எந்த மாதிரியான கிளாசிக் வாகனமாக இருந்தாலும் அதற்கு வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் 1954 ஆண்டு மாடல் ஃபியாட் மில்லேசென்டோ (1954 Fiat Millecento) கார் இ-வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
ஃபியாட் மில்லேசென்டோ காருக்கு இப்போதும் ரசிகர்கள் ஏராளம். எனவேதான் குறிப்பிட்ட சில வாகன ஆர்வலர்களின் இல்லத்தில் தற்போதும் புதுப்பொலிவுடன் ஃபியாட் மில்லேசென்டோ பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இத்தகைய ஓர் காரே தற்போது மின்சார வெர்ஷனுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் அடார் டிகட்ரான் (Ador Digatron) எனும் நிறுவனமே ஃபியாட் மில்லேசென்டோ காரை இ-காராக மாற்றிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் இ-மொபிலிட்டி, பேட்டரி மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே மிகவும் அழகான எலெக்ட்ரிக் காரை உருவாக்கி, அது தற்போது மின்வாகன மாடிஃபிகேஷன் பணியிலும் களமிறங்கியிருக்கின்றது. மின்சார காராக மாற்றப்பட்டிருக்கும் ஃபியாட் மில்லேசென்டோ காருக்கு இ-டிக்கி (E-Diggi) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்காரை மின்சார வாகனமாக மாற்றுவதற்காக பல்வேறு பாகங்கள் அகற்றப்பட்டு, புதிய பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மிக முக்கியமான சிறப்பம் சேர்ப்பாக 48 வோல்ட் / 10 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இணைக்கப்பட்டிருப்பது உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இத்துடன், 21 kW வசதிக் கொண்ட மின் மோட்டார் இ-டிக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இத்தகைய வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காராகவே ஃபியாட் மில்லேசென்டோ உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஃபியாட் மில்லேசென்டோ இ-டிக்கியாக உருவாகிய கதை:
புனேவில் பேக்கரி கடைக்காரராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரருக்கு சொந்தமானதே இந்த கிளாசிக் கார் ஃபியாட் மில்லேசென்டோ என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயன்பாடற்ற நிலையில் இக்கார் சாலையில் விடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதைக் கண்ட அடார் டிகாட்ரான் நிறுவனம், காரின் அருமையை உணர்ந்து அக்-காருக்கு புத்துயிர் வழங்க முடிவு செய்தது.
ஆனால், இந்தியாவில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இக்காரை மீண்டும் எரிபொருளில் இயங்கும் வாகனமாக உருவாக்குவது எந்த வகையிலும் பயனளிக்காது என்பதை உணர்ந்த அடார் டிகாட்ரான், அதனை மின்சார வெர்ஷனாக உருவாக்க திட்டமிட்டது. இந்த திட்டத்தை தற்போது முழுமையாக்கியும் காட்டியிருக்கின்றது.
அசல் நிறத்திலேயே கார் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்னதாக என்ன நிறத்தில் அது காட்சியளித்ததோ அதே நிறத்திலேயே இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், புதிதாக இ-டிக்கி எனும் பெயர் ஸ்டிக்கர்கள் காரின் பக்கவாட்டு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
Source: Energizing India.TV
முன்னதாகப் பிரீமியர் பத்மினியின் எஞ்ஜினிலேயே இக்கார் இயங்கிக் கொண்டிருந்தது. இதனையே வெளியேற்றிவிட்டு தற்போது மின்மோட்டார் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. பழைய வாகனங்களை இவ்வாறு பசுமை (மின்) வாகன மாற்றுவதன் வாயிலாக அவற்றை சுற்றுச்சூழலுக்கு நண்பனாக மாற்ற முடியும். அதாவது, மாசு ஏற்படுத்தா வாகனமாக அவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.
இதன் வாயிலாக தாத்தா, அப்பா என குடும்பத்தின் முக்கியமான நபர்களின் ஞாபகமாக வைத்திருக்கும் விண்டேஜ் கார்களை கூடுதல் சில ஆண்டுகள் நம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், இதற்கு முறையாக ஆர்டிஓ-விடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம். பழைய வாகனங்களை மின் வாகனமாக மாற்றி, அதனை பயன்படுத்துவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படாத நிலையே தற்போது வரை நாட்டில் நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: கடைசி படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.