Just In
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 4 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இனி சோப்பு டப்பாக்களை விக்க முடியாது... வருகிறது மத்திய அரசின் அதிரடி திட்டம்... மாருதி நிறுவனத்திற்கு உதறல்!
மத்திய அரசின் அதிரடி திட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாரத் என்சிஏபி (Bharat NCAP) திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பாரத் என்சிஏபி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எம்1 கேட்டகரி (M1 category) வாகனங்களுக்கு பாரத் என்சிஏபி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5 டன்களுக்கும் குறைவான மொத்த எடை கொண்ட 8 இருக்கைகளுக்கு மிகாமல் இருக்கும் பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படக்கூடிய வாகனங்களே எம்1 கேட்டகரியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால் கார்கள்.
பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ், கார்கள் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பிடப்படும். இந்த மோதல் சோதனைகளில் ஒவ்வொரு காரும் எப்படி செயல்படுகிறதோ, அதை பொறுத்து, ஸ்டார் ரேட்டிங்குகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பான கார்களை தேர்வு செய்வதற்கு இது உதவியாக இருக்கும்.
தற்போதைய நிலையில் 'மேட் இன் இந்தியா' கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பால் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால் இனிமேல் இந்தியாவிற்கு என சொந்தமாக கார் மோதல் சோதனை அமைப்பு இருக்கும். அதுதான் பாரத் என்சிஏபி. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போதைய நிலையில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் அசத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 3 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. அவை டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்கள் ஆகும்.
மறுபக்கம் மஹிந்திரா நிறுவனம் தனது 2 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. அவை மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகும். தற்போதைய நிலையில் இந்த 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளன.
இதுதவிர டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் பல்வேறு கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை தலையில் சூடியுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல கார்கள், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மண்ணை கவ்வி வருகின்றன.
எனவே பாரத் என்சிஏபி திட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. பாரத் என்சிஏபி திட்டத்தை அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக்க கூடாது என மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கியவை என்ற கருத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாரத் என்சிஏபி திட்டம் கார் விற்பனை எண்ணிக்கையை அதிகரித்து கொள்வதற்கு, கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்தியாவில் சமீப காலமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னேறி விட்டது. இதற்கு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் சிறப்பான செயல்பாடுதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே பாரத் என்சிஏபி மோதல் சோதனைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதிக ஸ்டார்களை வாங்கும் கார்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. முன்பு போல் அல்லாமல், தற்போது கார்களின் பாதுகாப்பிற்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!