Just In
- 19 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
China Lockdown: சீனாவால் மாருதிக்கு விழப்போகும் பலத்த அடி! இப்படி ஒரு நிலைமை வரும்னு நினைத்துக்கூட பார்க்கலயே!
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் லாக்டவுன் போடப்பட்டு வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மாருதி சுஸூகி நிறுவனத்திற்குத் தேவையான செமி-கண்டெக்டர்களை சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் சீனாவில் போடப்பட்ட லாக் டவுனால் மாருதி நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 லட்சம் கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் உள்ள லாக்டவுனால் அந்நாட்டிலிருந்து செமி கண்டெக்டர்களை சப்ளை செய்யும் நிறுவனங்களால் இந்தியாவிற்குச் செமி கண்டெக்டர் கருவிகளை அனுப்ப முடியவில்லை. இதனால் மாருதி நிறுவனத்தின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த டிசம்பர் மாதம் மாருதி நிறுவனம் மொத்தமே 1.35 முதல் 1.40 லட்சம் கார்களை மட்டுமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தி கடந்த 13 மாதங்களில் குறைவான உற்பத்தியாகும். கடைசியாக 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருப்பதிலேயே குறைவாக 1.35 லட்சம் கார்கள் மட்டுமே உற்பத்தியாகி வந்தது. அதாவது வரும் டிசம்பர் மாதம் மாருத நிறுவனம் மொத்த உற்பத்தியில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் கார்களாவது குறையும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி நிறுவனம் தற்போது சராசரியாக ஒரு காரை ரூ5.51 லட்சத்திற்கு விற்பனை செய்து வருகிறது. தற்போது 10 ஆயிரம் கார்கள் உற்பத்தி குறைகிறது என்றால் இதன்படி நிறுவனத்திற்கு ரூ551 கோடி இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பார்க்க வெறும் 10 ஆயிரம் கார் உற்பத்தி குறைவு தான் என்றாலும் நஷ்டத்தின் அளவை கணக்கிடும் போது ரூ500 கோடிக்கு அளவிற்கு நஷ்டம் ஏற்படுகிறது. மிகப்பெரிய நஷ்டம் தான். இது இந்தியா பொருளாதார வளர்ச்சியைக் கூட பாதிக்கும்.
மாருதி நிறுவனம் அதிகபட்சமாகக் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 1.84 லட்சம் கார்களை உற்பத்தி செய்திருந்தது. அந்த காலகட்டத்தில் செமி கண்டெக்டர் தட்டுப்பாடு குறைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் குறைந்ததால் வரிசையாக உற்பத்தி குறைந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் ரூ1.52 லட்சம் கார்கள் உற்பத்தியாகியிருந்தது.
இந்த 2022ம் ஆண்டை பொருத்தவரை மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்களை மட்டும் மொத்தம் 13.18 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளனர். இதே காலகட்டத்தில் இந்த கார்களின் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாருதி நிறுவனம் அடுத்த 4 மாதங்களில் மாதம் 1.90 லட்சம் கார்களை தயாரித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்நிறுவனம் தனது வென்டர்களுக்கு இந்த அளவிலான உற்பத்திக்கு வாக்குறுதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!