Just In
- 39 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 2 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 3 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்களே தோத்துடுச்சேப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!
15 நிமிஷத்தில் முழுமையாக சார்ஜாக கூடிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை (ஆட்டோ ரிக்ஷாவை) எக்ஸ்போனென்ட் எனர்ஜி (Exponent Energy) நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த மின்சார ஆட்டோ குறித்த கூடுதல் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
எக்ஸ்போனென்ட் எனர்ஜி (Exponent Energy) நிறுவனம் தான் உருவாக்கியிருக்கும் உலகின் அதிக வேகமாக சார்ஜாகும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் முடியாத வேகத்தில் இந்த ஆட்டோ சார்ஜாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, முழுமையாக சார்ஜை இழந்த பூஜ்ஜிய நிலையில் இருந்து 100 சதவீத சார்ஜை எட்ட இந்த ஆட்டோவிற்கு வெறும் 15 நிமிடங்களே போதும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஆனால், இந்த அதிக வேக சார்ஜை நிறுவனத்தின் இ-பம்ப் சார்ஜிங் மையத்தால் மட்டுமே சாத்தியம் என்ற ஓர் ட்விஸ்டையும் நிறுவனம் முன் வைத்துள்ளது. ஆமாங்க, இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ உற்பத்தியாளர் ஓர் இ-பம்ப் சார்ஜிங் மையத்தையும் உருவாக்கியிருக்கின்றது. இதுவே, ஆட்டோவை அதிக வேகத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள உதவியாக இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் 8.19 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் வழக்கமான எல்பிஎஃப் செல் கெமிஸ்ட்ரியைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பேட்டரி பேக்காகும். இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
நிறுவனத்தின் இ-பம்ப் சார்ஜிங் மையத்தைக் கொண்டு தங்களுடைய எலெக்ட்ரிக் ஆட்டோவை மட்டுமல்ல பிற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களையும் மிக அதி வேகத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், அனைத்து நிறுவனங்களின் மின்சார வாகனத்தையும் சில நிமிடங்களில் இங்கு முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது தெரிகின்றது.
அதாவது, 15 மடங்கு அதி வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். எக்ஸ்போனென்ட் எனர்ஜி நிறுவனம் இந்த அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோவை வரும் அக்டோபர் மாதம் டெலிவரி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது நிறுவனத்தின் இந்திய தயாரிப்பிற்கு ஆட்டோ பிரியர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பு நிலவி வருவதாகவும் இந்த வரவேற்பை முன்னிட்டு இ-ஆட்டோவை விரைவில் டெலிவரி கொடுப்பதற்கான பணியை நிறுவனம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
இத்துடன், நிறுவனத்தின் இ-பம்புகளுக்கு அமைப்பதற்கு சுமார் 100 ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும், நிதியாண்டு 2023 முடிவடைவதற்குள் அவை அனைத்தையும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் பெரும்பாலான ஆர்டர்கள் பெங்களூருவில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
சமீப காலமாக மின்சார வாகனங்கள் தீ விபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு நிறுவனம் எலெக்ட்ரிக் ஆட்டோவில் பயன்படுத்தியிருக்கும் பேட்டரியை உருவாக்கியிருக்கின்றது. 50 உயர் வெப்பநிலையை கூட அது தாக்கு பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது நீண்ட ஆயுட் காலம் மற்றும் அதிக பயன்பாட்டு வசதியையும் கொண்டிருப்பதாக எக்ஸ்போனென்ட் எனெர்ஜி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, வழக்கமான ஆட்டோக்களில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை முழு கவர்ச்சியான வாகனமாக உருவாக்கியிருக்கின்றது.
இத்தகைய சூப்பரான ஆட்டோவையே எகஸ்போனென்ட் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வெளியீட்டு நிகழ்வின் வாயிலாக அல்டிகிரீன் ப்ரொபல்சன் லேப் உடனான கூட்டணியையும் அது வெளிப்படுத்தியுள்ளது. மின்சார வாகனம், பேட்டரி மற்றம் இ-பம்ப் உள்ளிட்ட கருவிகளை கூடுதல் சிறப்புமிக்கதாக மாற்ற இந்த இணைப்பு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், அவை அதிக நேரங்களை முழுமையாக சார்ஜடைய எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. இந்த அவலநிலையை தவிர்க்கக் கூடிய ஓர் தயாரிப்பாகவே இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறன் தற்போது விற்பனையில் அதி-நவீன எலெக்ட்ரிக் கார்களையே ஓரங்கட்ட வைக்கின்ற அளவிற்கு இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: உதாரணத்திற்காக எக்ஸ்போனென்ட் எனர்ஜி நிறுவனத்தின் பிற தயாரிப்புகளின் படம் மற்றும் அல்டிகிரீன் ஆட்டோ படம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!