Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை
உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் பிரபலமான டெஸ்லா, விற்பனை செய்யப்பட்ட அதன் கார்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ளவுள்ளது. எதற்காக டெஸ்லா கார்கள் மீண்டும் திரும்ப அழைக்கப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் டெஸ்லா பிராண்டை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். இந்தியாவில் கார்களை அறிமுகப்படுத்த கடந்த பல மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டுவந்த டெஸ்லா நமது அண்டை நாடான சீனாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது.
இவ்வாறு பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கோலோச்சி வந்தாலும், ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே டெஸ்லாவை ஏகப்பட்ட பிரச்சனைகள் சுற்றி வந்துள்ளன. இந்த வகையில் சமீப காலமாக சிறுசிறு பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட டெஸ்லா கார்கள் பழுது பார்ப்பிற்காக திரும்ப அழைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அவற்றின் தொடர்ச்சியாக, தற்போது விற்பனை செய்யப்பட்ட தனது சுமார் 11 லட்ச வாகனங்களை திரும்ப அழைக்க டெஸ்லா முடிவெத்துள்ளது. இந்த 11 லட்ச டெஸ்லா வாகனங்களில் 2017ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்களும், 2020-2021இல் தயாரிக்கப்பட்ட மாடல் ஒய் கார்களும், 2021-2022இல் தயாரிக்கப்பட்ட மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களும் அடங்குகின்றன.
திரும்ப அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் கார்களில் இரு சரிப்பார்ப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒன்று, கார்களின் ஜன்னல் ரிவர்ஸல் சிஸ்டத்தில் பழுது ஏற்படுகிறதா என்பதும், மற்றொன்று, ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை கண்டறியும் விதத்தில் ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளதும் ஆகும்.
இதில் விண்டோ ரிவர்ஸல் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சனையினால் ஜன்னல் கண்ணாடிகள் ஆட்டோமேட்டிக்காக மேலேறும் போது ஏதேனும் இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதில் சரியாக செயல்படுவதில்லையாம். இத்தகைய பழுதினால் சிறிய பிரச்சனைகளில் இருந்து மிகவும் மோசமான பெரிய அளவிலான பிரச்சனைகள் வரையில் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக டெஸ்லா கருதுகிறது.
ஆட்டோமேட்டிக் விண்டோ ரோல் அப் வசதி ஆனது தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்படும் ஒன்றாக மாறி வருகிறது. இந்த வசதியினால் பயணிகள் அவ்வப்போது ஜன்னல் கண்ணாடிகளை கீழிறக்கி, மேலேற்ற வேண்டிய தேவை இருக்காது. ஜன்னல் கண்ணாடியை மேலேற்றும் போது இடையில் பயணிகளின் கை, விரல்கள் அல்லது வேறு ஏதேனும் பொருள் வந்தால் அதற்கேற்ப செயல்படும் வகையில் இந்த வசதி ஆனது வடிவமைக்கப்படுகிறது.
ஆனால் இந்த தொழிற்நுட்ப வசதி மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தனது எலக்ட்ரிக் கார்களில் முறையாக செயல்படுவதில்லை என்பதை டெஸ்லா சில பல சோதனைகளின் மூலம் கண்டறிந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்யவே இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கை ஆகும். இந்த பிரச்சனையை சாஃப்ட்வேர் அப்டேட்டின் மூலம் தீர்க்க முடியும் என டெஸ்லா நம்புகிறது.
ஏற்கனவே கூறியதுபோல், கடந்த மாதங்களில் இதேபோன்று சில திரும்ப அழைப்பு நடவடிக்கைகளை டெஸ்லா மேற்கொண்டு இருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் ஏற்படும் பிரச்சனைகளாகவே இருந்தன. ஆனால் தற்போது சாஃப்ட்வேர் அப்டேட்டாக இல்லாதததை அறிந்து விற்பனை செய்யப்பட்ட தனது கார்களை டெஸ்லா திரும்ப அழைக்கிறது.
இதுகுறித்த டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் கருத்து தெரிவிக்கையில், எங்களது பெரும்பாலான திரும்ப அழைப்புகள் திரும்ப அழைப்புகளே கிடையாது. இது சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்டே ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த பிரச்சனையினால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நமது அரசாங்கம் டெஸ்லாவை இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட கூறியது எலான் மஸ்க்கிற்கு ஏற்றதாக விளங்கவில்லை. ஆனால், கனடாவில் புதிய மெகா தொழிற்சாலையை நிறுவ டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!